ஜெயலலிதா மரண விசாரணை- சசிகலா உதவியாளர் ஆஜர்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த சசிகலா உதவியாளர் கார்த்திகேயனுக்கு ஆறுமுகசாமி கமிஷன் சம்மன் அனுப்பியதை அடுத்து அவர் இன்று ஆஜராகினார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி கமிஷன் முன்பு ஆஜராகியுள்ளார்.
ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அவர் சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்துவிட்டார்.

இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் நிலவியதால் தமிழக அரசு சார்பில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷனில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெ.வுடன் நெருங்கி இருந்த அதிகாரிகள் என 20-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சசிகலா உதவியாளர் கார்த்திகேயன் இன்று ஆஜராக கமிஷன் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து அவர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications