தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளிகள் வழக்கம்போல திறக்கப்படும்: மாவட்ட ஆட்சியர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளிகள் வழக்கம்போல திறக்கப்படும் என்று ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், நாளை ஜூன் 1ம் தேதி வழக்கம் போல திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
கடந்த 22ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தின் போது, போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர்.
இந்த சம்பவம் தமிழகத்தில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 5 தினங்களாக இயல்பு நிலை திரும்பி உள்ளது மற்றும் சட்ட ஒழுங்கு முழுமையாக கட்டுப்பாட்டில் உள்ளது. உயர்நீதிமன்ற அறிவிப்பின்படி, இரண்டு தடயவியல் நிபுணர்கள், எயிம்ஸ் அல்லது ஜிப்மர் டாக்டர்கள் அடங்கிய குழுக்கள் இன்று மாலை தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளனர்.
அவர்கள் குற்றவியல் நீதிமன்ற நடுவர்கள் முன்னிலையில் , அரசு மூத்த மருத்துவர்கள், மரணமடைந்த 7 நபர்களின் உடல்கள் மறு உடற்கூராய்வு செய்ய உள்ளார்கள். பின்னர், குடும்பத்தினரிடம் உடல்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மீதி உள்ள 6 நபர்களின் உடல்கள் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி , மேலும், ஒரு வார காலத்திற்கு பதப்படுத்தி வைக்கப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் மரணமடைந்தவர்களுக்கு நிவாரணத்தொகை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ20 லட்சமாகவும்,பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாகவும், சிறிய காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.50 லட்சமாகவும் உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்கள்.
அதன்படி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, இதுவரை பலத்த காயமடைந்த 40 நபர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் , சிறிய
காயமடைந்த 23 நபர்களுக்கு தலா ரூ.150 லட்சமும் என மொத்தம் 63 நபர்களுக்கு ரூ.2.34 கோடி நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் நாளை ஜூன் 1ம் தேதி வழக்கம் போல திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications