காவிரி பிரச்சினை: தமிழகத்தில் கர்நாடகா பேருந்துகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
சென்னை: பெங்களூருவில் தமிழக பேருந்துகள் எரிக்கப்பட்டதையடுத்து தமிழகத்தில் அதேபோல சம்பவங்கள் எதுவும் நடைபெற்று விடாத வகையில் கர்நாடக பேருத்துகளுக்கு போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காவிரி நதிநீர் பிரச்சனை காரணமாக தமிழகம் மற்றும் கர்நாடகவில் மாறி மாறி மோதல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இதன் உச்சகட்டமாக பெங்களூருவில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 60க்கும் மேற்பட்ட பேருந்துகள் எரிக்கப்பட்டது. இதனால் போராட்டத்தை கட்டுப்படுத்த அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவிர, போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுடவும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தமிழகத்தில் பிரச்சனை பெரிதாகாமல் இருக்க அம்மாநில பேருந்து மற்றும் லாரிகளுக்கு தமிழக போலீசார் பலத்த பாதுப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். பேருந்துகள் அம்மாநில எல்லைக்குள் செல்லும் வரை முன்னாள் ஒரு வாகனமும், பின்னால் ஒரு வாகனமும் பாதுகாப்புக்கு சென்று வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக போலீஸ் அதிகாரி செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது அவர், கர்நாடகா பதிவு எண் கொண்ட பேருந்து, லாரிகளுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரச்சனைக்குரிய பகுதிகளை அவைகள் தாண்டும் வரை, நமது அதிகாரிகள் அதற்கு உரிய பாதுகாப்பு வழங்குவார்கள். அதேபோல வேறு மாநிலங்களில் உள்ள தமிழர்கள் அமைதிகாக்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தற்போதுவரை நிலைமை எங்கள்கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்று கூறியுள்ளார்.

-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications