ஏப். 20ல் சென்னையில் ஐபிஎல் நடக்காது, நடத்த விட மாட்டோம்... சீமான் அதிரடி
ஏப்ரல் 20ம் தேதி சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெறாது என்று சீமான் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : ஏப்ரல் 20ம் தேதி சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை நடத்த விடமாட்டோம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதல்முறையாக தமிழர்கள் தங்களின் உரிமைக்காக ஒற்றுமையாக ஒன்று திரண்டு போராடி வரும் நிலையில் அவர்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் ஐபிஎல் போட்டியை நடத்தக் கூடாது என்று அரசியல் கட்சி என்ற அடையாளத்தைத் தாண்டி தமிழர் கலை இலக்கிய பேரவை சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தின் போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து சீமான் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது : தமிழர்கள் அனைவரும் தங்களின் உரிமைக்காக கட்சி பாகுபாடின்றி ஒன்றுபட்டுள்ளனர். இதனால் எந்த கட்சிக் கொடியையும ஏந்தாமல் தமிழகத்திற்கு என்று உள்ள கொடியை நாங்கள் கையில் ஏந்தினோம்.
தமிழகத்திற்கான பிரச்னை என்பதாலேயே மாநிலக் கொடியை ஏந்தி போராடினோம். மாநிலப் பிரச்னைகளுக்கு அதற்கான கொடியை ஏந்தி போராடுவதில் எந்தத் தவறும் இல்லை. கர்நாடகா தனக்கான தனிக்கொடியை அறிமுகம் செய்துள்ளது, அரசே அதிகாரப்பூர்வமாக இதை அறிவிக்கிறது. அதே அடிப்படையில் தான் மாநில உரிமைக்காக தமிழ்நாட்டின் கொடியை ஏந்தி போராடினோம். இதற்காக நாங்கள் தனி நாடு கேட்கிறோம் என்று அர்த்தமல்ல.
நேற்று கிரிக்கெட் பார்க்கப் போனவர்களின் நீருக்கும் சோறுக்கும் சேர்த்து தான் நாங்கள் போராடுகிறோம். வன்முறை பற்றி பேசும் ரஜினி களத்திற்கு வந்து போராட வேண்டும். நாளை பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்துவோம். ஏப்ரல் 20ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியை எதிர்த்தும் போராட்டம் நடத்துவோம். ஏப்ரல் 20ம் தேதி ஐபிஎல் போட்டி நடைபெறாது என்றும் சீமான் தெரிவித்தார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications