ஏப். 20ல் சென்னையில் ஐபிஎல் நடக்காது, நடத்த விட மாட்டோம்... சீமான் அதிரடி
ஏப்ரல் 20ம் தேதி சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெறாது என்று சீமான் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : ஏப்ரல் 20ம் தேதி சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை நடத்த விடமாட்டோம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதல்முறையாக தமிழர்கள் தங்களின் உரிமைக்காக ஒற்றுமையாக ஒன்று திரண்டு போராடி வரும் நிலையில் அவர்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் ஐபிஎல் போட்டியை நடத்தக் கூடாது என்று அரசியல் கட்சி என்ற அடையாளத்தைத் தாண்டி தமிழர் கலை இலக்கிய பேரவை சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தின் போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து சீமான் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது : தமிழர்கள் அனைவரும் தங்களின் உரிமைக்காக கட்சி பாகுபாடின்றி ஒன்றுபட்டுள்ளனர். இதனால் எந்த கட்சிக் கொடியையும ஏந்தாமல் தமிழகத்திற்கு என்று உள்ள கொடியை நாங்கள் கையில் ஏந்தினோம்.
தமிழகத்திற்கான பிரச்னை என்பதாலேயே மாநிலக் கொடியை ஏந்தி போராடினோம். மாநிலப் பிரச்னைகளுக்கு அதற்கான கொடியை ஏந்தி போராடுவதில் எந்தத் தவறும் இல்லை. கர்நாடகா தனக்கான தனிக்கொடியை அறிமுகம் செய்துள்ளது, அரசே அதிகாரப்பூர்வமாக இதை அறிவிக்கிறது. அதே அடிப்படையில் தான் மாநில உரிமைக்காக தமிழ்நாட்டின் கொடியை ஏந்தி போராடினோம். இதற்காக நாங்கள் தனி நாடு கேட்கிறோம் என்று அர்த்தமல்ல.
நேற்று கிரிக்கெட் பார்க்கப் போனவர்களின் நீருக்கும் சோறுக்கும் சேர்த்து தான் நாங்கள் போராடுகிறோம். வன்முறை பற்றி பேசும் ரஜினி களத்திற்கு வந்து போராட வேண்டும். நாளை பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்துவோம். ஏப்ரல் 20ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியை எதிர்த்தும் போராட்டம் நடத்துவோம். ஏப்ரல் 20ம் தேதி ஐபிஎல் போட்டி நடைபெறாது என்றும் சீமான் தெரிவித்தார்.
-
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications