திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடிகள் எல்லாம் ஆளுவார்கள்.. சொல்றது யாருன்னு பாருங்க மக்களே!
திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடிகள் எல்லாம் ஆளுவார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை: திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடிகள் எல்லாம் ஆளுவார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார். மேலும் திமுகவினர் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை ஆக்கிரமித்து விடுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
தெர்மாகோல் திட்டத்தின் மூலம் ஒரே நாளில் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் அமைச்சர் செல்லூர் ராஜூ. சட்டசபையிலும் கூட இவரது தெர்மாகோல் திட்டம் எதிரொலித்தது.
இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு
அதற்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, இந்தி திணிப்பை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது என்றார். திராவிட இயக்கமான அதிமுக இந்தி திணிப்புக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் என்றார்.

ஜெ.வும் எதிர்த்தார்
அதேநேரத்தில் இந்தியை படிக்க விரும்பும் மக்கள் படித்துக்கொள்ளலாம் என்றும் கூறினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் கூட இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தார் என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

ரவுடிகள் எல்லாம் ஆளுவார்கள்
திமுக குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடிகள் எல்லாம் ஆளுவார்கள் என்றார். மேலும் திமுகவினர் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை ஆக்கிரமிப்பார்கள் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

திமுகவினரிடையே சலசலப்பு
விரைவில் தேர்தல் வரும் திமுக ஆட்சிக்கு வரும் காலம் வெகு தொலைவில் இல்லை என அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் கூறிவருகிறார். இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூவின் இந்த கருத்து திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications