செருப்பை தைக்க சில்லரை இன்றி தவித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி.. கோவையில்
கோவை வந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது பிய்ந்த செருப்பை சாலையோர கடையில் தைத்து அணிந்து கொண்டார்.
கோவை: ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க கோவை வந்திருந்த மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, சாலையோர செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் செருப்பு தைத்து போட்டுக்கொண்டார். அப்போது கூலியாக கொடுக்க சில்லரை இல்லாமல் திண்டாடினார்.
டெல்லியிலிருந்து, கோவைக்கு, 12:30 மணிக்கு, விமானம் மூலம் வந்த ஸ்மிருதி இரானி, 2:30 மணிக்கு, ஈஷா யோகா மையத்தில், நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.

அவர் போகும் வழியில்தான் தனது செருப்பு அறுந்து போயிருந்ததை கவனிதார். எனவே, பேரூர் பகுதியில், சாலையோர செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவரை அணுகினார் இரானி.
தனது செருப்பை தைத்துக்கொடுக்குமாறு இரானி கேட்டுக்கொண்டார். தொழிலாளியும் செருப்பை தைத்துக்கொடுத்தார். ஆனால் அவருக்கு கொடுக்க ரூ.100 நோட்டுதான் இரானியிடம் இருந்தது. ஆனால் தொழிலாளியிடம் திருப்பித் தர சில்லரை இல்லை. எனவே, இரண்டு தையலாக போட்டுத்தருகிறேன் என கூறி, செருப்புக்கு ஸ்ட்டிராங்காக தையல் போட்டார் அந்த தொழிலாளி. இதன்பிறகு 100 நோட்டை கொடுத்துவிட்டு கிளம்பினார் இரானி.
இந்த சம்பவத்தின்போது, கோவை பாஜக பிரமுகர், வானதி சீனிவாசன் உடனிருந்தார். பாஜக தொண்டர்கள் இந்த காட்சியை செல்போனில் கிளிக்கினர். மத்திய அமைச்சர் எளிமையாக செயல்பட்டதாக அவர்கள் பாராட்டினர். சிலரோ அமைச்சர் விளம்பரத்திற்காக இவ்வாறு செய்திருப்பார் எனவும் விமர்சனம் செய்தனர். இருப்பினும் இரானியையும் சில்லரை தட்டுப்பாடு பிரச்சினை எட்டியுள்ளது என்பது உண்மைதான்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications