இன்று சுவாதி கொலையான நாள்.. இன்னும் பாதுகாப்பு இல்லையே.. பெண்கள் குமுறல்
மென்பொறியாளர் கொலை செய்யப்பட்டு ஓராண்டு ஆகியும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படவில்லை என பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை: மென்பொறியாளர் சுவாதி கொலை செய்யப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. ஆனால் இதுவரை நுங்கம்பாக்கம் ரயிஸ் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை என பெண் பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மென்மொறியாளர் சுவாதி , கடந்த ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் நெல்லையை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சுவாதி கொலை செய்யப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. ஓராண்டுக்கு முன்னர் இதே நாளில் நடைபெற்ற கொலையால் சென்னை மாநகரே நடுங்கி போனது. குறிப்பாக இளம்பெண்கள் பெரும் பீதியடைந்தனர்.
இதையடுத்து பாதுகாப்புக்காக ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் கொலை நடந்த நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கூட இதுவரை சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை என பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பகல் நேரங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தாலும் மாலை 6 மணிக்கு மேல் பெண் போலீஸ்கள் இருப்பதில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மாலை 6 மணிக்குப் பிறகும் பெண் போலீஸ்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல் ரயில்களிலும் பெண்களுக்கான பெட்டிகளில் மதுபோதையில் சில ஆண்கள் ஏறுவதாக குற்றம்சாட்டியுள்ள பயணிகள் இதனை தடுக்க ரயில் பெட்டிகளிலும் பெண் போஸீசாரை அமர்த்த வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டால் சுவாதி படுகொலை போன்று மேலும் ஒரு கொலை நடக்காமல் தவிர்க்கலாம் என்றும் பயணிகள் தெரிவத்துள்ளனர். இனியாவது கேமராக்கள் பொருத்தப்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம்..
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications