"தற்கொலை"க்கு சமம்... ஓட்டுப் போடாதீங்க... கிராமங்களில் பகீர் பிரச்சாரம் செய்யும் அமைப்புகள்!
தர்மபுரி: தமிழக சட்டசபைத் தேர்தலில் யாரும் வாக்களிக்க வேண்டாம் என தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களி சில அமைப்புகள் அதிரடியாக பிரச்சாரம் செய்து வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த தேர்தல்களில் இருந்து வேறுபட்டு, இம்முறை எப்படியும் 100 சதவீத வாக்குப்பதிவை நிகழ்த்திக் காட்ட வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது தேர்தல் ஆணையம்.

ஆனால், தேர்தல் ஆணையத்திற்கு எதிராக யாரும் வாக்களிக்கப் போக வேண்டாம் என தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட கிராமங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
விவசாயிகள் விடுதலை முன்னணி மற்றும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
முக்கிய பிரச்சினைகளுக்கு தேர்தலால் தீர்வு காண முடியும் என்பது கானல் நீர் போன்றது. தேர்தல் தற்கொலைக்கு சமமானது என இவர்கள் போஸ்டர் அடித்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.
இது போன்ற தேர்தல் ஆணையத்திற்கு எதிரான நடவடிக்கைகள் பெரும்பாலும் விளம்பரத்திற்காகவே செய்யப்படுகின்றன என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்து. ஆனால், வேட்பாளர்களைப் பிடிக்கவில்லை எனில் நோட்டாவிற்கு வாக்களியுங்கள் என தேர்தல் ஆணையமே மக்களிடம் கூறி வரும் நிலையில், தேர்தலையே புறக்கணியுங்கள் என்ற இந்த பிரச்சாரம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை புறக்கணிக்க வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டியது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், ‘இந்த தேர்தல் முறை மக்களை ஏமாற்றும், ஒடுக்கும் செயல் . தேர்தல்கள் தற்கொலை போன்றது. விவசாயிகளுக்கு உண்மையான அதிகாரம் பெறுவதற்காகவும், விவசாயிகள் மற்றும் மக்களின் பிரச்னைகளுக்காக போராடி வருகிறோம்' என்கின்றனர்.
தற்போதைய சூழ்நிலையில் இது கட்சிகளுக்கு எதிரான போராட்டம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டாலும், தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமின்றி, எதிர்காலத்தில் மாநில அரசுக்கும் இது பெரும் சவால் என்பதை மறுக்க முடியாது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications