குற்றாலம் அருகே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: போலீசார் விசாரணை!

Subscribe to Oneindia Tamil

தென்காசி : தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியின் பாதுகாப்பிற்கு வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாநகர ஆயிதப்படையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பார்த்திபன் என்பவர், ஜல்லிக்கட்டு போராட்ட ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் பாதுகாப்பு பிரிவில் இருந்து வந்துள்ளார்.

முன்னாள் நீதிபதிக்கு பாதுகாப்பு

முன்னாள் நீதிபதிக்கு பாதுகாப்பு

இந்நிலையில் குற்றாலத்திற்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முன்னாள் நீதிபதி நேற்று வந்திருந்தார். அப்போது அவருடன் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பார்த்திபனும் வந்திருந்தார். இருவரும் குற்றாலத்தில் இருந்து பழைய குற்றாலம் செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தனர்.

விடுதி அறையில் துப்பாக்கிச் சத்தம்

விடுதி அறையில் துப்பாக்கிச் சத்தம்

நள்ளிரவில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பார்த்திபன் தங்கி இருந்த அறையில் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. உடனே விடுதியில் இருந்த ஊழியர்கள் அங்கு ஓடி சென்றனர். அப்போது பார்த்திபன் தங்கி இருந்த அறையில் உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது. இதனால் வேறு வழியின்றி விடுதி ஊழியர்கள் அறைக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

துப்பாக்கியல் சுட்டு தற்கொலை

துப்பாக்கியல் சுட்டு தற்கொலை

அப்போது துப்பாக்கியால் சுட்டுக்கொண்டபடி பார்த்திபன் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தார். இறந்து கிடந்த அவரது கையில் துப்பாக்கியும் இருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த விடுதி ஊழியர்கள், அவர் தற்கொலை செய்துகொண்டதை உறுதி செய்தனர். பின்னர், உடனடியாக குற்றாலம் போலீசாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவம் நடந்த விடுதிக்கு வந்த இன்ஸ்பெக்டர் தாமஸ் தலைமையிலான போலீசார், தற்கொலை செய்து கொண்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பார்த்திபனின் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

முன்னாள் நீதிபதியின் பாதுகாப்புக்கு வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பார்த்திபன் எதற்காக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்? மனம் அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் நீதிபதியின் பாதுகாப்புக்கு வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், விடுதி அறையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், குற்றாலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+