திருச்சி சிறப்புமுகாமில் ஈழத் தமிழர் தம்பதி தற்கொலை முயற்சி.. தமிழக அரசுக்கு உருக்கமான கடிதம்
திருச்சி : சேர்ந்து வாழ அனுமதிக்காததால் சிறப்புமுகாமில் உள்ள ஈழத் தமிழர் தம்பதி தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து முதலமைச்சருக்கு மகேஸ்வரன் என்ற அந்த அகதி உருக்கமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், கடந்த 3 வருடங்களாக திருச்சியில் உள்ள முகாமில் தாம் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், சென்னையில் தனது மனைவி தனியாக கஷ்டப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மனைவியுடன் சேர்ந்து வாழ அனுமதி கேட்ட போது நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது மனைவி தொடர்ந்த வழக்கின் இறுதியில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மனைவியுடன் சேர்ந்து வாழ மனிதாபிமான அடிப்படையில் பரிசீலிக்குமாறு கூறியும், அதனை "க்யூ" பிரிவு நிராகரித்து விட்டதாகவும் மகேஸ்வரன் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தான் ஒரு கைதியோ, குற்றவாளியோ அல்ல என்ற நிலையில் எங்காவது ஒரு இடத்தில் நிபந்தனைகளுக்குட்பட்டு மனவியுடன் சேர்ந்து வாழ தமிழக அரசிடம் அனுமதி கேட்டதாகவும், 40 வயதுக்கு மேல் குழந்தைப் பெற்றுக் கொண்டு வாழ்வது தேவையில்லை என்பதால், தன்னிடம் இருந்து மனைவியை பிரிக்க அவரது உறவினர்கள் முயல்வதாகவும் மகேஸ்வரன் கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்த நிலையில் இருவரும் சாவதற்கு முடிவெடுத்ததாகவும், தங்கள் சாவுக்குப் பிறகாவது சிறப்பு முகாமின் உண்மை நிலை தெரியவரும் என்றும் மகேஸ்வரன் அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தற்கொலைக்கு முயன்ற மகேஸ்வரன் மற்றும் அவரது மனைவி பிரஷாந்தி ஆகியோர் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications