ரஜினி கருத்தை ஏற்க முடியவில்லை.. அதனால் கமலுடன் இணைந்தேன்.. ஸ்ரீபிரியா
சென்னை: கமல் கட்சியில் இணைந்து செயல்படுவது ஏன் என்பது குறித்து ஸ்ரீப்ரியா விளக்கம் அளித்துள்ளார்.
ரஜினி அரசியல் கட்சியை தொடங்கப் போவதாக கூறியுள்ளார். இந்த ஆண்டுக்குள் அவர் கட்சியைத் தொடங்கிவிடுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இதனிடையே ரஜினிக்கு முன்பே சினிமாவுக்கு வந்ததை போல் அவருக்கு முன்பே கமல் கட்சியை தொடங்கிவிட்டார். கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார்.
இந்த கட்சியில் பாடலாசிரியர் சினேகன், நடிகை ஸ்ரீப்ரியா, நடிகர்நாசரின் மனைவி கமீலா நாசர் உள்ளிட்டோர் இணைந்து கட்சி பணிகளை ஆற்றி வருகின்றனர்.
ரஜினி, கமல் ஆகியோருடன் ஆரம்ப காலங்களில் நடித்த ஸ்ரீப்ரியா ரஜினியுடன் இணையாமல் கமல் கட்சியில் இணைந்தது ஏன் என்பது குறித்து அவரிடம் கேட்டபோது அவர் கூறுகையில் ரஜினியின் கருத்தை என்னால் ஏற்க முடியவில்லை.
இந்த காரணத்தால்தான் கமலுடன் இணைந்து செயல்படுகிறேன் என்று ஸ்ரீப்ரியா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications