மும்முனைப் போட்டிக்குத் தயாராகும் ஸ்ரீரங்கம்.... ?
திருச்சி: ஸ்ரீரங்கம் சட்டசபைத் தேர்தல் களம் சூடாக ஆரம்பித்துள்ளது. முதல் கட்சியாக திமுக தனது வேட்பாளரை அறிவித்துள்ளது. வழக்கமாக அதிமுகதான் முந்திக் கொண்டு வேட்பாளரை அறிவித்து வேலையையும் தொடங்கும். அந்த வகையில், ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் தற்போது அதிமுகவுக்கு சறுக்கலாக அமைந்துள்ளது திமுகவின் வேட்பாளர் அறிவிப்பு.
பிப்ரவரி 13ம் தேதி நடைபெறவுள்ள ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் மும்முனைப் போட்டிக்கு வாய்ப்புள்ளது. எப்படி என்று கேட்கலாம்.. கடைசி நேரத்தில் காங்கிரஸின் ஆதரவை திமுக பெறலாம் என்ற எதிர்பார்ப்பு தற்போது வலுத்து வருகிறது.

எனவே காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் திமுகவும், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பாஜகவும் போட்டியிடலாம். அதிமுக வழக்கம் போல தனித்துப் போட்டியிடும்.
இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று தொகுதியை தக்க வைக்க தீவிரம் காட்டி வருகிறது. இந்த தொகுதியில் பெண் வேட்பாளரை நிறுத்தவும், அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவும், கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.
திமுகவைப் பொறுத்தவரை தான் அடுத்த சட்டசபைத் தேர்தலுக்கு உருவாக்கவுள்ள புதிய கூட்டணிக்கான ஒத்திகையாக இந்த தேர்தல் களத்தை பயன்படுத்த முனையலாம் என்று தெரிகிறது.
திமுகவை விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், மனிதநேயம் மக்கள் கட்சி ஆகியவை ஆதரிக்கின்றன. காங்கிரஸின் ஆதரவையும் திமுக நாடலாம் என்று தெரிகிறது. எனவே இந்த இடைத் தேர்தலில் புதிய அணிக்கான முயற்சியை திமுக மேற்கொள்ளக் கூடும் என்றே தெரிகிறது.
மறுபக்கம் அதிமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிப்பதோடு, தனது பலத்தையும் நிரூபித்து அடுத்த சட்டசபைத் தேர்தலில் தன்னை ஒரு பலம் வாய்ந்த கட்சியாக காட்டிக் கொள்ள பாஜக முயலலாம்.
இவர்களுக்கு நடுவில் அதிமுக கோல் போட்டாக வேண்டும். ஆனால் அக்கட்சியோ அமைதியாக இருக்கிறது. வேட்பாளரைக் கூட இன்னும் அறிவிக்கவில்லை. பிரசாரத்திற்கு ஜெயலலிதா வருவாரா என்பதும் சந்தேகமாகவே உள்ளது.
மொத்தத்தில் ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் களம் அதிமுகவுக்கு மட்டுமல்லாமல், திமுக, பாஜக போன்ற கட்சிகளுக்கும் கூட அக்னிப் பரீட்சையாகவே அமையும் என்று எதிர்பார்க்கலாம்.
-
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்!












Click it and Unblock the Notifications