வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
வைகுண்ட ஏகாதசி யை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் ரங்கா முழக்கத்துடன் நம்பெருமாளை தரிசித்தனர்.
திருச்சி : 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் பெருமைக்குரியதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் மாதம் 28ஆம்தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
பகல்பத்து நிகழ்ச்சி கடந்த 29ஆம்தேதி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலையில் புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகல் பத்து நிறைவு நாளில், மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் சேவை சாதித்தார்.

சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் திறப்பு எனும் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் இன்று அதிகாலை 4.30மணிக்கு நடைபெற்றது. ரங்கா.. கோவிந்தா என்ற கோஷம் முழங்க சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசலை கடந்து அருள்பாலித்தார்.

ரங்கா முழக்கத்துடன் தரிசனம்
நம்பெருமாள் எழுந்தருளியதை காண காத்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ரங்கா முழக்கத்துடன் தரிசனம் செய்தனர். பக்தர்களும் பரமபத வாசல் வழியாக சென்று ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்தனர்.

பக்தர்களுக்கு வசதி
சொர்க்கவாசல் இன்று இரவு 10 மணி வரை திறந்து இருக்கும். மேலும் வருகிற 13ஆம்தேதி வரை பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை சொர்க்கவாசல் திறந்து இருக்கும். 14ஆம்தேதி மாலை 3.15 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்து இருக்கும். 15ஆம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சொர்க்கவாசல் திறப்பு கிடையாது. 16ஆம்தேதி பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரையும், 17ஆம்தேதி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையும் சொர்க்க வாசல் திறந்து இருக்கும். மேற்கண்ட நாட்களில் பக்தர்கள் சொர்க்கவாசலை கடந்து செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி
சென்னை திருவல்லிக்கேனி பார்த்தசாரதி கோயிலிலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபதவாசல் திறக்கப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்தனர்.

மாதவ பெருமாள்
சென்னை மயிலாப்பூரில் உள்ள மாதவ பெருமாள், கேசவ பெருமாள் ஆலயங்களிலும் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் அதிகாலை 5 மணிக்கு நடைபெற்றது. அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications