மழையால் நின்ற முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம்.. செப்டம்பர் 5ல் மீண்டும் நடக்கிறது!
மழை காரணமாக பாதியில் நின்று போன முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம் செப்டம்பர் 5ம் தேதி நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.
சென்னை : திமுக சட்டசபையில் இதுவரை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரவேயில்லை என்றும் ஏற்கனவே கொண்டு வந்தது நம்பிக்கை வாக்கெடுப்பு என்பது கூட தெரியாமல் முதல்வர் பேசுவதாக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
முரசொலி பவள விழா பொதுக்கூட்டம் நேற்று பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முரசொலி பவளவிழா மலர் வெளியீடு நடைபெற்று தலைவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்த போது திடீரென மழை பெய்ததால் தலைவர்கள் உரையாற்ற இடைஞ்சல் ஏற்பட்டதையடுத்து பொதுக்கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் முரசொலி பவள விழா பொதுக்கூட்டம் குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின், செப்டம்பர் 5ல் முரசொலி பவளவிழா பொதுக் கூட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார். சட்டசபையில் இதுவரையில் திமுக எந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் கொண்டு வரவில்லை.
இதற்கு முன்னர் சபாநாயகர் மீது திமுக கொண்டு வந்தது நம்பிக்கை வாக்கெடுப்பு, திமுக சார்பில் இதுவரை அதிமுக அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படவேயில்லை, இந்த அடிப்படை கூட தெரியாமல் முதல்வர் பேசுகிறார். அதிமுக அரசு மத்திய அரசின் அனைத்து உத்தரவிற்கும் அடிபணிந்து போவதற்கு பாஜகவின் அழுத்தமே காரணம், என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications