அக்னியின் ருத்ரதாண்டவம்... திருத்தணியில் 117 டிகிரி பாரன்ஹீட் - வெயிலுக்கு ஒருவர் பலி
தமிழகம் எங்கும் இன்றும் பல நகரங்களில் அனல் காற்று வீசுகிறது. திருத்தணியில் 117 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. வெயிலுக்கு நெல்லையில் ஒருவர் பலியாகியுள்ளார்.
நெல்லை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பல நகரங்களில் அனல் காற்று வீசுகிறது. திருத்தணியில் 117 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் வெயிலுக்கு சுற்றுலாப் பயணி உயிரிழந்துள்ளார்.
அக்னி நட்சத்திர காலத்தின் இறுதிகட்டம் என்பதால் பல மாவட்டங்களில் அனல் காற்று வீசி வருகிறது. வெப்பத்தின் வேகத்தை தாங்க முடியாமல் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். நெருப்புத்துண்டுகளை வீசுவது போல அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
|
வெயில் ருத்ரதாண்டவம்
சென்னையில் 3வது நாளாக இன்றும் காலை முதலே அனல் காற்று வீசி வருகிறது. காலையிலேயே 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பம் பதிவானது.

சதமடித்த வெயில்
இன்றும் பல நகரங்களில் வெயில் 105 டிகிரியை தாண்டி பதிவானது. திருவள்ளூரில் அதிகபட்சமாக 114 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
சேலம், நெல்லை, கடலூர், ஈரோடு, கரூர், தஞ்சாவூரில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.

சுற்றுலா பயணி மரணம்
நெல்லை மாவட்டத்திற்கு சுற்றுலா வந்த ஆவரைகுளத்தைச் சேந்த காமராஜ் என்பவர் பாபாநாசத்தில் வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் மயங்கி விழுந்து உயிழந்துள்ளார்.

வானிலை எச்சரிக்கை
வடதமிழகத்தில் நாளை வரை அனல்காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்றும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் ஓரிரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருத்தணியில் 117 டிகிரி பாரன்ஹீட்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 117 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. ஆந்திரா மாநிலத்தில் இருந்து வீசும் அனல் காற்றினாலேயே வெப்பநிலை அதிகரித்துள்ளது. உள் மாவட்டங்களில் கோடை மழை பெய்துள்ளது. இந்த ஆண்டு கோடை மழை 4 சதவிகிதம் குறைவாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications