சுவாதி கொலை வழக்கு: சென்னை போலீஸ் கமிஷனர், ரயில்வேக்கு மகளிர் ஆணையம் அதிரடி நோட்டீஸ்! 2 வாரம் கெடு
சென்னை: இன்போசிஸ் ஊழியல் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில், தேசிய மகளிர் ஆணையம் தலையிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை காவல்துறை கமிஷனர் மற்றும் தெற்கு ரயில்வே உரிய பதிலை 2 வாரங்களுக்குள் அளிக்க வேண்டும் என்று ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து, வாலிபர் ஒருவரால் இன்போசிஸ் ஊழியர் சுவாதி (24) வெட்டி கொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கியுள்ளது இந்த கொலை சம்பவம்.
பணிக்கு செல்லும் பெண்கள் பாதுகாப்பு, பொது இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த கொலையின் ஊடே எழுகிறது.

தலையிட்ட ஆணையம்
இதையடுத்து, விவகாரத்தில் தலையிட்டுள்ளது தேசிய மகளிர் ஆணையம். சுவாதி கொலை சம்மந்தமாக சில கேள்விகளை எழுப்பியுள்ள ஆணையம், சென்னை சிட்டி போலீஸ் கமிஷனர் மற்றும் தெற்கு ரயில்வே இந்த கொலை தொடர்பாக தங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2 வாரங்கள் கெடு
இன்னும் 2 வாரங்களுக்குள், கமிஷனரும், தெற்கு ரயில்வேயும், தங்கள் நோட்டீசுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று மகளிர் ஆணையம் கெடு விதித்துள்ளது.

விசாரணை குழு
போலீஸ் கமிஷனர் மற்றும் தெற்கு ரயில்வே தங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் பதில் கூறாவிட்டால், மகளிர் ஆணையம் சிறப்பு விசாரணை குழுவை அமைக்க வேண்டிவரும் என்றும் அந்த நோட்டீசில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஆஜராகுவது கட்டாயம்
இவ்வாறு விசாரணை குழுவை மகளிர் ஆணையம் அமைத்தால், போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள், அந்த குழுவின் முன்னால் ஆஜராகி பதில் அளிக்க வேண்டிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications