உலகளவில் மனோரமாவைப் போல் சிறந்த நடிகை இல்லை: டி.ஆர். உருக்கம்
சென்னை: உலகளவில் மனோரமாவைப் போல் சிறந்த நடிகை இல்லை என நடிகர் டி.ராஜேந்தர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
கின்னஸ் சாதனை புரிந்து, தமிழ் சினிமாவில் என்றென்றும் தனக்கென தனி முத்திரை படைத்து, அனைவராலும் ஆச்சி என செல்லமாக அழைக்கப்பட்ட நடிகை மனோரமா நேற்றிரவு காலமானார்.
அவரது உடலுக்கு திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மனோரமாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் நடிகர் டி.ராஜேந்தர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் டி.ஆர். பேசியதாவது:-
உலகளவில் மனோரமாவைப் போல் சிறந்த நடிகை இல்லை. மனோரமாவின் ரசிகனாகவே வாழ்ந்து வருகிறேன். அவரது புகழ் கடைசி வரை நிலைத்து நிற்கும்.
மனோரமாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், என் சார்பாகவும், என் குடும்பத்தார் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.