தமிழகத்தில் அரசு வேலையில் வெளியாரை வெளியேற்றக் கோரி ரயில் மறியல் போராட்டம்
சென்னை: தமிகத்தில் உள்ள அரசு நிறுவனங்களில் வேலை பார்க்கும் வெளியாரை வெளியேற்றக் கோரி தமிழ்த் தேசியப் பேரியக்கம் வரும் டிசம்பர் மாதம் 12ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளது.
தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் ஏழாவது பொதுக்குழுவின் முதல் கூட்டம் சென்னை க.க. நகரிலுள்ள அமைப்பின் தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி நடைபெற்றது. காலை முதல் மாலை வரை நடைபெற்ற கூட்டத்திற்கு இயக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த அமைப்பின் தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழல் குறித்த அரசியல் அறிக்கையை பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் முன்வைத்தார். அமைப்புப் பணிகள் குறித்த வேலை அறிக்கையை தலைவர் பெ.மணியரசன் முன்வைத்துப் பேசினார். விவாதங்களுக்குப் பின் அவை நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தின் நிறைவில், "தமிழகத்திலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள வெளியாரை வெளியேற்று! இந்திய அரசு நிறுவனங்களில் 80 விழுக்காட்டுப் பணிகளை தமிழர்களுக்கே வழங்கு" என்ற கோரிக்கையை முன்வைத்து, வரும் டிசம்பர் மாதம் 12ம் தேதி தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என ஒருமானதாகத் தீர்மானிக்கப்பட்டது. இப்போராட்டத்தில், பெருந்திரளான தமிழின உணர்வாளர்களையும், பொது மக்களையும் பங்கேற்கச் செய்வதற்கானப் பணிகளில் உடனடியாக ஈடுபடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications