முதல்வர் என்று யாரும் இருக்கிறார்களா என்றே தெரியவில்லையே - மு.க.ஸ்டாலின் கேள்வி
தஞ்சை: தமிழகத்தில் முதல்வர் என்று யாரேனும் இருக்கிறார்களா என்றே தெரியவில்லை. அனைத்துப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தற்கொலை மாநிலமாக மாறி வருகிறது தமிழகம் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தஞ்சை மாவட்டம், ராயன்கோட்டை கிராமத்தில் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தென்னை வணிக வளாகம் ஆகியவை மூடப்பட்டிருப்பதையும், கல்லணை கால்வாய் இன்னும் தூர்வாரப்படாமல் இருப்பதையும் ஞாயிற்றுக்கிழமை மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஸ்டாலின்.

அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஸ்டாலின் அளித்த பதில்கள்:
தென்னை விவசாயிகள் நலனுக்காக:
தஞ்சை டெல்டா மாவட்டத்தில் இந்த பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதியில் தான் தென்னை விவசாயிகள் 90 சதவீதம் பேர். உற்பத்தியாகும் தேங்காய்களை முழு தேங்காயாக மட்டுமே, இப்பகுதி விவசாயிகள் விற்பனை செய்து வந்ததால் போதிய வருமானம் இல்லாத நிலையில் இருந்து வந்தனர். தலைவர் கலைஞர் அவர்கள் இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தேங்காயை மதிப்புக் கூட்டு பொருளாக மாற்றும் வகையில் தென்னை வணிக வளாகம் ஒன்றை இங்கே அமைக்க அரசாணை வெளியிட்டு, நிதி ஒதுக்கி ரூபாய் 8 கோடி செலவில் புதுமையான கட்டமைப்பு அனைத்தும் ஏற்படுத்தப்பட்ட வணிக வளாகத்தை திறந்து வைத்தார்.
முடக்கி் போட்ட ஜெயலலிதா அரசு:
ஆனால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் இந்த வளாகத்தை எந்தவித முறையிலும் செயல்படுத்த முடியாத வகையில் இங்குள்ள நவீன தொழிற்நுட்ப கருவிகள் எல்லாம் பழுதாகி செயலிலந்து போகும் நிலையில் இருக்கிறது. இதை உடனே திறக்கப்பட வேண்டும் என்று இங்குள்ள தென்னை விவசாய சங்கங்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்தும், மாவட்ட ஆட்சியாளர்கள் கூட்டத்தில் வலியுறித்தியும் இன்னும் செவி சாய்க்கவில்லை. ஆகையால் உடனே தலைவர் கலைஞர் அனுமதியோடும் திராவிட முன்னேற்ற கழக தலைமையின் ஒப்புதளோடும் விரைவில் இந்த பகுதி மாவட்ட நிர்வாகிகள் பங்கு கொள்ளகூடிய மிகப் பெரிய போரட்டம் நிச்சயம் நடைபெறும்.
கல்லணை தூர் வாரும் பணி பாதிப்பு:
நான் காலை காரில் வருகிற வழியில் தான் கல்லணை கால்வாய் பகுதி தூர்வாரப்படாமல் இருப்பதை கண்டு வந்தேன். இதே கல்லணை கால்வாய் மறுசீரமைப்புப் பணிக்காக 200 கோடி ரூபாய் நபார்டு வங்கியின் மூலம் நிதி உதவி பெற்று முதல் கட்டப் பணிகள் திராவிட முன்னேற்ற கழக அரசால் நிறைவேற்றப்பட்டது. ஜெயலலிதா ஆட்சியில் இந்த திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது வேதனைக்குரிய ஒன்று.
கவலைப்படாத அரசு:
எதைப்பற்றியும் இந்த அரசு கவலைப்படுவதில்லை. இதற்கு முன்னர் அவர்களின் தலைவி, விடுதலைக்காக கோயில் கோயிலாக அங்கம் பிரதட்சனம் செய்வது காவடி தூக்குவது ஆகியவற்றில் ஈடுபட்டிருந்தனர். தற்போது அவர் விடுதலையானப் பிறகும்கூட இன்னும் அவர்கள் பணிக்கு திரும்பவில்லை என்பது தான். வேதனைக்குரிய வருந்தத்தக்க விஷயம்.
தற்கொலை மாநிலமாகும் தமிழகம்:
இங்கு அரசு இருக்கிறதா? ஒரு முதலமைச்சர் என்கிறவர் இருக்கிறாரா? என்பதே தெரியாத நிலையில் தான் இந்த அரசாங்கம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து விட்டது. தமிழகம் இன்று தற்கொலை மாநிலமாக மாறி வருகிறது' என்றார் ஸ்டாலின்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications