10 ஆம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை மாயம் - சென்னையில் பதுங்கி இருப்பதாக தகவல்
சென்னை: கன்னியாகுமரி, களியக்காவிளை பள்ளியில் இருந்து மாயமான ஆசிரியையும், 10ம் வகுப்பு மாணவரும் சென்னையில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
களியக்காவிளை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிய பிஜூ சந்திரலேகா என்ற ஆசிரியை கடந்த 2 ஆம் தேதி திடீரென மாயமானார். அவர் மாயமான நாளில் அதே பள்ளியில் படித்த 10 ஆம் வகுப்பு மாணவர் கிருஷ்ணகுமார் என்பவரும் மாயமாகி உள்ளார்.
2 பேர் மாயமானது குறித்தும் களியக்காவிளை போலீசில் அவர்களது பெற்றோர் தனித்தனியாக புகார் செய்துள்ளனர். புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.
ஆசிரியைக்கும், மாணவருக்கும் பழக்கம் இருந்து அவர்கள் 2 பேரும் சேர்ந்து மாயமானார்களா? அல்லது தனித்தனியாக மாயமானார்களா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 2 பேரின் செல்போன்களும் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளதால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்றும் தெரியவில்லை.
போலீசார் விசாரணை நடத்தி மாணவர் கிருஷ்ணகுமார், பெற்றோருக்கு எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை கைப்பற்றினர். அதில் உங்கள் மனதை புண்படுத்த எனக்கு விருப்பமில்லை. எனக்கு சொத்து, வீடு, கார் எதுவும் தேவையில்லை. நான் உங்களை விட்டு பிரிந்து செல்கிறேன் என எழுதி இருந்தார். எந்த நோக்கத்தில் இந்த கடிதத்தை கிருஷ்ணகுமார் எழுதி இருந்தார் என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று மாணவர் கிருஷ்ணகுமார், தாயாரின் செல்போனுக்கு பேசினார். அப்போது தான் சென்னையில் இருப்பதாக கிருஷ்ணகுமார் கூறினார். தொடர்ந்து பேசிய அவரிடம் மாயமான பள்ளி ஆசிரியை உன்னுடன் இருக்கிறாரா என உறவினர்கள் கேள்வி எழுப்ப உடனடியாக போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
போலீசாரும், உறவினர்களும் தன்னை கண்டுபிடித்து விடாமல் இருக்க கிருஷ்ணகுமார் பொது தொலைபேசியில் இருந்து பேசி இருக்கிறார். எனினும் அவர் சென்னையில் பதுங்கி இருப்பது உறுதியாகி உள்ளது. எனவே அவரை கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ளனர். அதேசமயம் கிருஷ்ணகுமாருடன் ஆசிரியை உள்ளாரா என்பது தெரியவில்லை. அவரையும் போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சர்ப்ரைஸ் ஆய்வில் ஷாக்கான அமைச்சர்.. அன்னூர் சமூக நீதி விடுதியின் அவலம்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications