10 ஆம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை மாயம் - சென்னையில் பதுங்கி இருப்பதாக தகவல்
சென்னை: கன்னியாகுமரி, களியக்காவிளை பள்ளியில் இருந்து மாயமான ஆசிரியையும், 10ம் வகுப்பு மாணவரும் சென்னையில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
களியக்காவிளை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிய பிஜூ சந்திரலேகா என்ற ஆசிரியை கடந்த 2 ஆம் தேதி திடீரென மாயமானார். அவர் மாயமான நாளில் அதே பள்ளியில் படித்த 10 ஆம் வகுப்பு மாணவர் கிருஷ்ணகுமார் என்பவரும் மாயமாகி உள்ளார்.
2 பேர் மாயமானது குறித்தும் களியக்காவிளை போலீசில் அவர்களது பெற்றோர் தனித்தனியாக புகார் செய்துள்ளனர். புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.
ஆசிரியைக்கும், மாணவருக்கும் பழக்கம் இருந்து அவர்கள் 2 பேரும் சேர்ந்து மாயமானார்களா? அல்லது தனித்தனியாக மாயமானார்களா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 2 பேரின் செல்போன்களும் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளதால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்றும் தெரியவில்லை.
போலீசார் விசாரணை நடத்தி மாணவர் கிருஷ்ணகுமார், பெற்றோருக்கு எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை கைப்பற்றினர். அதில் உங்கள் மனதை புண்படுத்த எனக்கு விருப்பமில்லை. எனக்கு சொத்து, வீடு, கார் எதுவும் தேவையில்லை. நான் உங்களை விட்டு பிரிந்து செல்கிறேன் என எழுதி இருந்தார். எந்த நோக்கத்தில் இந்த கடிதத்தை கிருஷ்ணகுமார் எழுதி இருந்தார் என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று மாணவர் கிருஷ்ணகுமார், தாயாரின் செல்போனுக்கு பேசினார். அப்போது தான் சென்னையில் இருப்பதாக கிருஷ்ணகுமார் கூறினார். தொடர்ந்து பேசிய அவரிடம் மாயமான பள்ளி ஆசிரியை உன்னுடன் இருக்கிறாரா என உறவினர்கள் கேள்வி எழுப்ப உடனடியாக போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
போலீசாரும், உறவினர்களும் தன்னை கண்டுபிடித்து விடாமல் இருக்க கிருஷ்ணகுமார் பொது தொலைபேசியில் இருந்து பேசி இருக்கிறார். எனினும் அவர் சென்னையில் பதுங்கி இருப்பது உறுதியாகி உள்ளது. எனவே அவரை கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ளனர். அதேசமயம் கிருஷ்ணகுமாருடன் ஆசிரியை உள்ளாரா என்பது தெரியவில்லை. அவரையும் போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
-
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா?












Click it and Unblock the Notifications