தென்காசியில் "அதை" பக்கத்தில் வைத்து கொண்டே காரிலேயே ரவுண்டு அடித்த கணவர்.. தண்ணீரில் மிதந்த மனைவி
தென்காசி: தென்காசியை கலங்கடித்த பெண் யார் என்பது குறித்து போலீசார் துப்பு துலக்கியதில், தற்போது குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.. அவர்களிடம் வாக்குமூலத்தையும் பெற்று சிறையில் அடைத்துள்ளனர். யாரிந்த பெண்? என்ன நடந்தது தென்காசியில்?
தென்காசியில் இலத்தூர் பகுதியில் கொல்லம் - மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பாழடைந்த குளத்தில், பெண்ணின் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தடயவியல் நிபுணர்களுடன் சென்ற போலீசார், அந்த குளத்திலிருந்து பெண்ணின் சடலத்தை கைப்பற்றினார்கள்.

அந்த பெண்ணின் உடல் முழுமையாக எரிந்த நிலையில் காணப்பட்டது. ஆனால், அவரின் கைகள் மட்டும் எரியாமல் இருந்தது. சடலத்துக்கு அருகிலேயே சில மது பாட்டில்கள் சிதறி கிடந்தன..
கொலை செய்தது எப்படி
சுமார் 30 வயது மதிக்கத்தக்க அப்பெண்ணின் சடலத்தை, போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்து, அந்த பகுதியில் காணாமல் போன இளம்பெண்களின் லிஸ்ட்டை வைத்தும் விசாரணை மேற்கொண்டனர். அத்துடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தும், நேரிலேயே சென்று விசாரணையை துவங்கினார்.
இந்நிலையில், பெண்ணின் கொலைக்கான காரணம் தெரியவந்துள்ளது.. காட்டுப் பகுதியில் பெண்ணை எரித்து கொன்றது, அவரது கணவர் ஜான் கில்பர்ட் என்பதும் அம்பலமாகியிருக்கிறது..
சொல்ல சொல்ல கேட்காத கமலி
சிவகாசியை சேர்ந்த ஜான் கில்பர்ட்டின் மனைவி பெயர் கமலி.. இவர் இன்னொருவருடன் தொடர்பில் இருந்ததாக தெரிகிறது. கள்ளக்காதலை கைவிட சொல்லி பலமுறை கண்டித்தும்கூட, கமலி தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ளவில்லையாம். அதனால், மனைவியை, கணவனே கொலை செய்துள்ளார். கோபத்தில் இரும்பு கம்பியால் தாக்கியே கமலியை கொன்றுள்ளார்..
அதுமட்டுமல்ல, ஆத்திரத்தில் மனைவியை கொன்றுவிட்டு, அந்த சடலத்தை என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்துள்ளார்.. இதற்காக, சடலத்துடன் 2 நாட்கள் காரிலேயே ரவுண்டு சுற்றி சுற்றி வந்துள்ளார். அதற்கு பிறகுதான், தென்காசி பாழடைந்த குளத்தில் வீசிவிட்டு சென்றிருக்கிறார்.
தம்பியும் சிக்கினார்
சடலத்துடன் காரிலேயே ஜான் கில்பர்ட் வலம்வந்ததுதான் போலீசாருக்கு மிகப்பெரிய க்ளூவாக இருந்திருக்கிறது. அந்த பகுதியில் பதிவாகியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான கார் நம்பரை வைத்துதான், ஜான் கில்பர்ட்டை போலீசார் பிடித்துள்ளனர்..
பிறகு அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இந்த கொலைக்கு ஜான் கில்பர்ட்டின் தம்பி உதவினாராம்.. இதையடுத்து, அண்ணன், தம்பி இருவரையுமே போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications