தனிக் கட்சியா?.. அழகிரி அதிரடி ஆரம்பம்....
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர் புதிய கட்சி தொடங்க அழகிரி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரு தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது திமுக தலைவர் .கருணாநிதி, தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டால் கட்சியில் மீண்டும் அவர் இணைவார் என்று கூறினார்.
இந்த நிலையில் திமுக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியல் பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று முன்னாள் தென்மண்டல அமைப்பாளர் மு.க. அழகிரி கூறியுள்ளார். அழகிரியின் அதிரடி நடவடிக்கைகள் என்னென்ன?..

ஆதரவாளர்கள் கருத்து
புதிய கட்சி தொடங்குவதாக வந்த செய்திகள் பற்றி கருத்து கூறியுள்ள அழகிரி 'நான் எப்போதும் யாரிடமும் தனிக்கட்சி தொடங்கப்போவதாக அறிவிக்கவில்லை. 2 மாதம் பொறுத்திருங்கள். எனது ஆதரவாளர்களுடன் கலந்து பேசி முடிவை அறிவிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். என் ஆதரவாளர்கள் என்ன சொல்கிறார்களோ? அதற்குத்தான் நான் கட்டுப்படுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

கோரிக்கை நிறைவேறினால்தான்
தென் மாவட்டத்தில் தேர்தல் பணி சுணக்கமாக நடைபெற காரணம் பற்றி கூறிய அழகிரி, வேலை பார்க்கச் சொல்லி தலைமையும் கேட்காது. நான் சேரவும் மாட்டேன். எனக்கு சில கோரிக்கைகள் இருக்கு. அதை எல்லாம் நிறைவேற்றினால்தான் நான் திமுகவில் சேர்வேன். இல்லைன்னா கிடையாது என்று கூறியுள்ளார் அழகிரி.

ஒருவர் திறக்க மற்றவர் மூடுகிறார்
எம்.ஜி.ஆர். நடிச்ச அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் குகையை திறக்க, ‘அண்டாகா கசம் அபூகா குகும் கதவை திறந்திடு சீசே' என்று சொல்லுவாங்க. திமுகவில் இப்போது அது மாதிரிதான் நடந்துக்கிட்டு இருக்கு. அதாவது தலைவர் கூட்டணி கதவு திறந்திருக்குங்கிறாரு. இன்னொருத்தரு மூடியிருக்குங்குறாரு என்றார்.

ரணகளத்திலும் குதூகலம்
திமுகவில் கூட்டணி குழப்பங்கள் கும்மியடித்தாலும், பிறந்தநாள் கொண்டாட்டம், தொண்டர்கள் சந்திப்பு என்று சுற்றி வருகிறார் அழகிரி. இந்த சூழ்நிலையில் புதிய கட்சி தொடங்கப் போவதாகவும் அறிவித்து தலைமையை மட்டுமல்லாது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications