மநகூ ஒருங்கிணைப்பாளர் பதவி தேவை இல்லை என்பதே சிபிஎம் நிலை: தட்ஸ் தமிழ் செய்தியை உறுதி செய்த திருமா
மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவி தேவை இல்லை என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை: மக்கள் நலக் கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளர் பதவி தேவை இல்லை என்பதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என தமிழ் ஒன் இந்தியா வெளியிட்ட செய்தியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உறுதி செய்தார்.
மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக வைகோ இருந்து வருகிறார். சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் ஒருங்கிணைப்பாளர் தேவை இல்லை என இடதுசாரிகள் கருதுவதாகவும் இதனால் வைகோ அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் நேற்று தமிழ் ஒன் இந்தியா செய்தி வெளியிட்டிருந்தது.

திருமாவளவன் உறுதி
அத்துடன் மதிமுக இதை திட்டவட்டமாக மறுத்ததையும் நாம் பதிவு செய்திருந்தோம். இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன், தமிழ் ஒன் இந்தியா வெளியிட்ட செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு தேவை இல்லை என்பதே சிபிஎம் கட்சி நிலை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உறுதி செய்துள்ளார்.

சிபிஎம் போட்டியிட விரும்பியது
இருப்பினும் ஒருங்கிணைப்பாளர் பதவி குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கவும் இல்லை என விளக்கம் அளித்திருக்கிறார் திருமாவளவன். மேலும் அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதிகளில் சிபிஎம் போட்டியிட விரும்பியதும் உண்மையே எனவும் திருமாவளவன் கூறியுள்ளார்.

அங்கிட்டு இங்கிட்டு
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன், தேர்தல்களின் போது மக்கள் நலக் கூட்டணியாகவும் பின்னர் மக்கள் நலக் கூட்டியக்கமாகவும் நாங்கள் செயல்படுகிறோம் எனவும் விளக்கம் அளித்திருக்கிறார்.
|
இதுதான் யதார்த்தம்
மக்கள் நலக் கூட்டியக்க அறிக்கைகளில் மதிமுக பொதுச்செயலர் வைகோ என்றே இடம்பெற்றுள்ளது. மக்கள் நலக் கூட்டணி அறிக்கைகளில்தான் வைகோ,ஒருங்கிணைப்பாளர் என இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications