சட்டசபையில் ஆளுநரை பற்றி பேச ஸ்டாலினுக்கு அனுமதி மறுப்பு ... திமுக வெளிநடப்பு
தமிழக சட்டசபை இன்று கூடுகிறது.
Recommended Video

சென்னை: ஆளுநர் ஆய்வு குறித்து பேச எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திமுக வெளிநடப்பு செய்தது.
தமிழக சட்டசபையில் மார்ச் மாதம் நடப்பு நிதி.யாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்துவதற்காக கடந்த மே மாதம் 29-ஆம் தேதி கூடியது.
இதையடுத்து கடந்த 14-ஆம் தேதி முதல் சட்டசபையில் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் எம்எல்ஏக்கள் அவரவர் தொகுதி பக்கம் சென்று பணிகளை கவனித்து வந்தனர்.

மானியக் கோரிக்கை
இந்நிலையில் 10 நாட்கள் கழித்து இன்று தமிழக சட்டசபை கூடியது. இன்றைய தினம் செய்தி மற்றும் விளம்பரம், எழுது பொருள் மற்றும் அச்சு, சுற்றுலை- கலை மற்றும் பண்பாடு துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

திமுக எம்எல்ஏக்கள்
இந்நிலையில் ஆளுநர் ஆய்வு குறித்து ஸ்டாலின் பேச முற்பட்டார். அப்போது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆளுநர் குறித்து பேசினால் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்ததார். இதற்கு திமுக எம்எல்ஏக்கள் கண்டனம் தெரிவித்தனர்.

சபாநாயகர் தலையீடு
அப்போது பேசிய ஸ்டாலின் மாநில சுயாட்சி பற்றி கருணாநிதி ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றார். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து பேச அனுமதிக்காமல் சபாநாயகர் குறுக்கீடு செய்தார். மேலும் ஆளுநரை பற்றி சட்டசபையில் விவாதிக்கக் கூடாது என்றார் சபாநாயகர்.

சட்டசபை கூட்டம்
தொடர்ந்து ஸ்டாலினை பேச விடாமல் சபாநாயகர் தடுத்ததால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து திமுக வெளிநடப்பு செய்தது. இந்த சட்டசபை இன்னும் 2 வார காலம் சட்டசபை கூட்டம் நடைபெற இருக்கிறது.

ஜூலை 9-இல் நிறைவு
நாளைய தினம் காவல் மற்றும் தீயணைப்பு துறை மீதான மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடைபெறும். வரும் ஜூலை 9-ஆம் தேதியுடன் சட்டசபை கூட்டத் தொடர் முடிவடைகிறது.
-
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு












Click it and Unblock the Notifications