தூத்துக்குடி நிலவரம்.. அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை
தலைமை செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தூத்துக்குடியில் மக்கள் எழுச்சியின்போது, போலீசாரின் கொடூர தாக்குதல் காரணமாக 13 பேர் மரணம் அடைந்தனர். பலர் இப்போது வரை உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில், இன்று காலை தூத்துக்குடி வந்த துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், சிகிச்சை பெறும் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ ஆகியோரும் வந்திருந்தனர். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கு நடைபெற்று வருகிறது.
விரைவில் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்றும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். இதன் பின்னர் தாக்குதல் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் பார்வையிட்ட துணை முதலமைச்சர் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.
இதனையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சர்களுடன் முதலமைச்சர் தற்போது தீவிர ஆலோசனையில் தற்போது தற்போது வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்று உள்ளதால், இன்று காலை தூத்துக்கு சென்று ஆய்வு நடத்தியதன் விவரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றிருப்பதாக கூறப்படுகிறது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications