நியூட்ரினோ திட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை... ஓ.பன்னீர்செல்வம்
தேனியில் அமையவுள்ள நியூட்ரினோ திட்டத்தால் பொதுமக்கள், காட்டு விலங்குகளுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
பெரியகுளம் : நியூட்ரினோ திட்டத்தால் பொதுமக்களுக்கும் காட்டுவிலங்குகளுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நியூட்ரினோ திட்டத்திற்கு விவசாயிகளும்,சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இத்தகைய கருத்தை கூறியுள்ளார்.
தேனிமாவட்டத்தில் காட்டுப்பகுதிகளில் சாலை அமைப்பதற்கான திட்டம் குறித்துத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வனத்துறைஅமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பெரியகுளத்தில் இருந்து அகமலை செல்லும் சாலையில் கண்ணக்கரையில் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் : நியூட்ரினோ திட்டத்தால் பொதுமக்களுக்கும் விலங்குகளுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றார்.

பெரியகுளத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு முகாமில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற ஓ.பன்னீர்செல்வம் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்துவதா, வேண்டாமா என்று அரசு பரிசீலிக்கும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் நியூட்ரினோ திட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி இருப்பது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் மலையை குடைந்து அணுசோதனை நடத்தும் திட்டம் இப்பகுதிக்கு ஏற்றதாக அமையாது. அவ்வாறு செய்தால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு, நீர்வளமும் பாதிக்கும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலையில் வகப்பாதுகாபபு சட்டத்தின் கீழ் பாதுகாப்பட்ட இடத்தில் இருந்து 4.9கி.மீ தூரத்தில் தான் உள்ளதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications