எதிர்ப்பையும் மீறி ஆந்திரா கட்டிய புல்லூர் தடுப்பணையில் குதித்து தமிழக விவசாயி தற்கொலை
வேலூர்: ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே புல்லூரில் உயர்த்திக் கட்டியுள்ள தடுப்பணையில் குதித்து தமிழக விவசாயி சீனு என்பவார் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தமிழக ஆந்திர மாநில எல்லையில், பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புல்லூர் தடுப்பணையின் உயரத்தை ஆந்திர மாநில அரசு உயர்த்தி உள்ளது. இதனால் தமிழகத்தில் விவசாயம் பாதிக்கப்படும் என்பதால், தமிழக விவசாயிகள், பொது மக்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனாலும் அதை சற்றும் கண்டு கொள்ளாமல் தமிழக விவசாயிகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் ஆந்திர அரசு தடுப்பணையைக் கட்டி முடித்தது. பாலாற்றின் குறுக்கே ஆந்திரா புல்லூரில் உயர்த்திக் கட்டியுள்ள தடுப்பணை தற்போது நிரம்பியுள்ளது. 12 அடி உயர புல்லூர் தடுப்பணை நிரம்பியுள்ளதால் ஆந்திர விவசாயிகள் ஆடு வெட்டி கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் அந்தத் தடுப்பணையில் குதித்து தமிழக விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பணையில் குதித்த சீனு ஆணை அருகே உள்ள பள்ளத்தூரை சேர்ந்தவராவார். தடுப்பணை உயரத்தை ஆந்திர அரசு உயர்த்தியதால் பள்ளத்தூருக்கு நீர் வரவில்லை. புல்லூர் அணை நிரம்பியும் தமது அணைக்கு நீர் வராததால் சீனு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நண்பர்கள் முன்னிலையில் தற்கொலை செய்து கொண்ட சீனுவின் உடலை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications