நீடிக்கும் தமிழக அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்... வெறிச்சோடிய அலுவலகங்கள்...பணிகள் பாதிப்பு!
6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர்கள் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடியுள்ளன.
சென்னை : மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்ந்து வருவதால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்ஷன் முறையையே பின்பற்ற வேண்டும், மத்திய அரசு ஊழிர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 64 துறைகளைச் சேர்ந்த 5 லட்சம் அரசுப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று முதல் நடைபெற்று வரும் வேலைநிறுத்தப் போராட்டம் இரண்டாம் நாளாக இன்றும் நீடிப்பதால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. வறட்சி நிவாரணப் பணி மற்றும் அரசுத் துறை சேவைகள் கிடைக்காமல் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வேலைநிறுத்தத்தின் இரண்டாம் நாளாக இன்று தமிழகம் முழுவதும் வட்டார அலுவலகங்கள் முன்பு போராட்டத்தில் அரசு ஊழியர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து தங்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்காவிடில் நாளையும் நாளை மறுதினமும் சிறைநிரப்பும்போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications