தமிழக அரசு மீதான எதிர்க்கட்சிகளின் ஊழல் புகார்கள்- விசாரணைக்கு ஆளுநர் பரிந்துரையா?
சென்னை: தமிழக அரசு மீது பா.ம.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அளித்த ஊழல் புகார்களின் பட்டியலை 'உரிய நடவடிக்கைக்காக' தமிழக அரசின் தலைமைச் செயலாலருக்கு அனுப்பி வைத்துள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. ஊழல் புகார்கள் மீது "உரிய நடவடிக்கை" எடுக்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்திருப்பதால் ஊழல் புகார்கள் மீதான நடவடிக்கைக்கு ஆளுநர் பரிந்துரைத்தாரா என்பது திட்டவட்டமாக தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆளும் அண்ணா தி.மு.க. ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடந்துள்ளது என்பது எதிர்க்கட்சிகளின் புகார். எந்தெந்த துறையில் ஊழல் நடைபெற்றுள்ளது என ஒரு பட்டியலை தயார் செய்து கொண்டு ஆளுநர் ரோசையாவை பா.ம.க. மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து மனு அளித்திருந்தனர்.
அதிமுக அரசு மீது பாட்டாளி மக்கள் கட்சி 209 பக்க ஊழல் புகாரை கொடுத்து 18 குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தது. காங்கிரஸ் கட்சியோ 25 துறைகளின் ஊழல் பட்டியலை கொடுத்திருந்தது.
இந்த ஊழல் புகார்கள் மீது ஆளுநர் ரோசையா மேற்கொண்ட நடவடிக்கை என்ன எனக் கேட்டும் ஊழல் புகார்க மனுக்களின் நகலை வழங்கக் கோரியும் காஞ்சிபுரம் தமிழ் மக்கள் பண்பாட்டுக் கழகத்தின் ரவி என்பவர் ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவுக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து ரோசையாவின் துணைச் செயலர் முரளிதரன் அளித்த பதில், பா.ம.க., மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆளுநர் ரோசையாவிடம் அளிக்கப்பட்ட மனுக்கள் "உரிய நடவடிக்கைக்காக" தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்த புகார்களின் நகல்களை வழங்க இயலாது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் ரோசையாவிடம் கொடுக்கப்பட்ட ஊழல் புகார் பட்டியலை "உரிய நடவடிக்கைக்கு" தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு அனுப்பியதாக ஆளுநர் மாளிகை கூறுகிறது. அப்படியானால் ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுயுங்கள் என்று பரிந்துரைத்துதான் ஆளுநர் ரோசையா அனுப்பி வைத்தாரா என்பது திட்டவட்டமாக தெரியவில்லை.
-
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி! -
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் பரபர சோதனை! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
"100 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்".. பரபரப்பைக் கிளப்பிய கிருஷ்ணசாமி! -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி












Click it and Unblock the Notifications