ஆடு, மாடு, லேப்டாப், 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும்
ஏழை பெண்களுக்கு இலவச ஆடு,மாடு வழங்கும் திட்டம், மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம், 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் என்று பட்ஜெட்டில் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் ஏழைப் பெண்களுக்கு 12 ஆயிரம் கறவைப் பசுக்களும், 1.5 லட்சம் குடும்பங்களுக்கு 6 லட்சம் வெள்ளாடுகளும் வழங்கப்படும் என்று ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது கடந்த 5 ஆண்டுகளாக ஏழை பெண்களுக்கு இலவச ஆடு மாடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அவரது மறைவிற்குப் பிறகும் ஆடு மாடு வழங்கும் திட்டம், மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டங்களுக்காக 2017 -18ல் நிதியமைச்சர் ஜெயக்குமார் நிதி ஒதுக்கியுள்ளார்.
இதேபோல 100 யூனிட் இலவச மின்சார திட்டம், இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் தொடரும் என்றும் ஜெயக்குமார் சட்டசபையில் அறிவித்துள்ளார்.

இலவச ஆடு மாடு திட்டம்
கால்நடை பராமரிப்புக்கு பட்ஜெட்டில் ரூ.1,161 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். ஊரக வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு ரூ.469 கோடி ஒதுக்கீடு. ஏழைப் பெண்களுக்கு 12 ஆயிரம் கறவைப் பசுக்களும், 1.5 லட்சம் குடும்பங்களுக்கு 6 லட்சம் வெள்ளாடுகளும் வழங்கப்படும்.

நாட்டு மாடுகள்
25 கால்நடை கிளை மையங்கள் கால்நடை மருந்தகங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடை மருந்தகங்கள் கால்நடை மருத்துவமனையாகவும் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். காங்கேயம், பர்கூர் உள்ளிட்ட நாட்டு மாடுகளை பாதுகாக்க அரசு நிதி உதவி வழங்கும்.

கல்லூரிகளில் ஆவின் பால் நிலையம்
கல்லூரிகளில் 200 புதிய ஆவின் பால் நிலையங்கள் உருவாக்கப்படும் என்று நிதி அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும் மதுரையில் ரூ.40 கோடி செலவில் பால் பதப்படுத்தும் நிலையம் புதியதாக தொடங்கப்படும் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மடிக்கணினி
2017-18-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் 150 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளியாகவும் 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலையாகவும் உயரும் என்று நிதி அமைச்சர் கூறியுள்ளார். மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க ரூ.758 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் 2017-18ம் ஆண்டு பட்ஜெட்டில் பள்ளிக் கல்விக்கு ரூ. 26,932 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தொடரும் இலவசங்கள்
100 யூனிட் மின்சாரம் தொடரும் இலவச வேட்டி சேலை திட்டம் தொடரும் என்றும் ஜெயக்குமார் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். அம்மா மகப்பேறு திட்டம், சஞ்சீவி திட்டம், என அனைத்து திட்டங்களும் தொடரும் என அறிவித்துள்ளார் ஜெயக்குமார். தமிழக அரசை 4 லட்சம் கோடி அளவிற்கு கடன் சுமை கழுத்தை நெரித்தாலும் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் அறிவித்த இலவச திட்டங்களை நிறுத்தாமல் அதற்கு நிதி ஒதுக்கியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications