சேகர் ரெட்டியுடன் தொடர்புடைய அமைச்சர்கள் மீது நடவடிக்கை? எடப்பாடி கோஷ்டி 'ஷாக்'
மணல் மாபியா சேகர் ரெட்டியுடன் தொடர்புடைய அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வருமான வரித் துறை அதிகாரிகள் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
சென்னை: மணல் மாபியா சேகர் ரெட்டியுடன் தொடர்புடைய அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வருமான வரித் துறை அதிகாரிகள் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
சேகர் ரெட்டி, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறையில் பல்வேறு ஒப்பந்த பணிகளை எடுத்துச் செய்வதில் முன்னணியில் இருந்து வருவதாகவும், அமைச்சர்கள் சிலருக்கு நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது.
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும், ஓ.பன்னீர் செல்வம் உள்பட பலருக்கு நெருக்கமானவருமான சேகர் ரெட்டியின் வீட்டில் கடந்த டிசம்பர் மாதம் வருமான வரித்துறை 2 நாள்களாக சோதனை நடத்தியது.

ஐடி சோதனை
இரு நாட்களிலும் சேர்த்து மொத்தம் ரூ.138 கோடியே 52 லட்சம் ரொக்கமும், 157 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதவிர வெவ்வேறு வங்கிகளில் ரூ.500 கோடி அளவுக்கு முதலீடு செய்ததற்கான ஆவணம், ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களும் சிக்கின.

மூட்டை, மூட்டையாக பணம்
மொத்தம் 10 மூட்டை அளவுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் சிக்கின. மேலும் அங்கிருந்து முக்கிய டைரி ஒன்றும் கைப்பற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து சேகர் ரெட்டி, சீனிவாசலு, ஆடிட்டர் பிரேம் குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

டைரியில் தமிழக அமைச்சர்கள்
தற்போது அங்கு கைப்பற்றப்பட்ட டைரியில் தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாகவும், அவர்களுக்கு பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.300 கோடி லஞ்சமாக வழங்கப்பட்டதாகவும் குறிப்பு இருந்ததாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நடவடிக்கைக்கு ஐடி பரிந்துரை
எனவே லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு கடிதம் ஐடி அதிகாரிகள் பரிந்துரை கடிதமும் எழுதியுள்ளனர். இதனால் எடப்பாடி அரசுக்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications