சகிப்புத்தன்மை இந்திய மக்களுடைய டி.என்.ஏ-வில் கலந்துள்ளது: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கருத்து
டெல்லி: சகிப்புத்தன்மை இந்திய மக்களுடைய டி.என்.ஏ வில் கலந்துள்ளது என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார்.
நாட்டின் மிக உயரிய விருதாக கருதப்படும் பத்ம விருதுகளை மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இந்தாண்டுக்கான விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், தொழிலதிபர் ராமோஜி ராவ், டாக்டர் விஸ்வநாதன் சாந்தா, நடனக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி, மறைந்த தொழிலதிபர் திருபாய் அம்பாய், நடிகர் ரஜினிகாந்த் உட்பட 10 பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்ட ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த சில மாதங்களாக ஏராளமானோர் தங்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகளை திருப்பி அளித்தனர். இது சரியான நடவடிக்கை என்று நான் கருதவில்லை. விருதுகளை திருப்பி அளித்தது தேசத்தை அவமதிப்பதே.
நமது நாடு சகிப்புத் தன்மை அற்ற நாடாக மாறியுள்ளதாக நான் எண்ணவில்லை. நமது நாடு சகிப்பின்மை நாடாக இருக்க முடியாது. சகிப்புத்தன்மை நம்முடைய டி.என்.ஏ-வில் கலந்துள்ளது.
விருதுகளை திருப்பி அளிப்பவர்கள் சுட்டிக் காட்டுவது அனைத்தும் குற்றங்கள். நாம் அதனை தனிப்பட்ட விவகாரமாக பார்க்க வேண்டும். குற்றம் குற்றமாக பார்க்கப்பட வேண்டும். இந்த வருடம் நிலைமை நிறைய மாறியிருக்கிறது. பத்ம விபூஷன் விருதினை ஏற்றுக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு பேசினார்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications