ஆட்டுக்கு தாடி போல தமிழ்நாட்டுக்கு ஆளுநர் -தபெதிக கு. ராமகிருஷ்ணன்
புதுவையில் கிரண்பேடி செய்யும் செயலை, தமிழக ஆளுநர் செய்கிறார் என த.பெ.தி.கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
கோவை: அதிகாரிகளை அழைத்து ஆளுநர் ஆலோசனை நடத்தியதை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆட்டுக்கு தாடி போல நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை அண்ணா சொன்னார் இப்போது ஆளுநர் அதிகாரம் செலுத்துவதா என்று தபெதிக தலைவர் கு. ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுச்சேரியில் கிரண்பேடி போல தமிழகத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செயல்பட நினைக்கிறார். அதனை அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார். ஆளுநர் ஆலோசனை நடத்திய விருந்தினர் மாளிகை எதிரே போராட்டம் நடத்திய தபெதிக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications