மோடிக்கு நமஸ்காரம்.. வீட்டுல போய் பலகாரம்.. பொன். ராதா, தமிழிசை மீது டி.ராஜேந்தர் பொளேர்!
மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜக தலைவர் தமிழிசை ஆகியோர் பிரதமர் மோடிக்கு நமஸ்காரம் மட்டுமே செய்கின்றனர். ஜல்லிக்கட்டு நடத்த ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவில்லை என்று டி.ராஜேந்தர் சாடியுள்ளார்.
மதுரை: மதுரையில் நடந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தின்போது மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனையும், தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜனையும் கடுமையாக தாக்கிப் பேசினார் லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர்.
மதுரை அவனியாபுரம் அருகே உள்ள கரடிக்கல் கிராமத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது. லட்சிய திமுக மற்றும் கிராமப் பொதுமக்கள் சார்பில் நடந்த இப்போராட்டத்தில் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.
மேலும், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு குழு மற்றும் பொதுமக்கள் சார்பாக பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. அதில் டி.ராஜேந்தரும் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது பாஜகவை கடுமையாக விளாசினார். டி.ராஜேந்தர் பேட்டியிலிருந்து:

தொடை நடுங்கி அதிமுக எம்.பிக்கள்
தமிழகத்தில் அதிமுகவுக்கு பெரும்பாலான எம்.பி.க்கள் இருந்தும், அவர்கள் ஜல்லிக்கட்டுக்காக பிரதமர் மோடியை சந்திக்கவில்லை. ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி எடுக்கவில்லை. மாநில அதிமுக அரசு இதற்காக குரல் கொடுக்கவில்லை. மாறாக அவர்கள் ஜால்ரா தான் போடுகின்றனர். அதிமுக எம்.பி.க்களோ தொடை நடுங்கி எம்.பி.க்களாக உள்ளனர்.

எப்பப் பார்த்தாலும்
ஜல்லக்கட்டு குறித்துக் கேட்டால் எப்போது பார்த்தாலும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை ஆகியோர் மக்களிடம் ஜல்லிக்கட்டு நடைபெறும் எனக்கூறி வருகின்றனர். செய்கிறோம் செய்கிறோம் என்று கூறுகின்றனர்.

மோடிக்கு நமஸ்காரம்.. வீட்டில் போய் பலகாரம்
ஆனால் என்ன செய்தார்கள். மோடியிடம் செய்கிறார்கள் நமஸ்காரம்.. வீட்டில் போய் செய்கிறார்கள் பலகாரம். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெற முழு ஆதரவுடன் லட்சிய தி.மு.க. செயல்படும். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடைபெறும்.

வீரம் விளைந்த மண்
மதுரை மண் வீரம் விளைந்த மண். இங்கு பாரம்பரியமான விளையாட்டு ஜல்லிக்கட்டு. தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு கடந்த 2 ஆண்டுகளாக தடையின் காரணமாக நடைபெறவில்லை. இது 3-வது ஆண்டாக நீடிக்காமல் இருக்க போராட்டம், உண்ணாவிரதம் போன்றவை நடத்தப்பட்டு வருகிறது என்றார் ராஜேந்தர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications