இரட்டை இலை சின்னம் சசிகலாவுக்கு கிடைப்பதுதானே நியாயம்... சொல்வது சாமி!
இரட்டை இலை சின்னம் சசிகலாவுக்கு கிடைப்பது தானே நியாயம் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுகவின் உண்மையான தலைமை சசிகலா என்றும், இரட்டை இலை சின்னம் அவருக்கு கிடைப்பது தான் நியாயமாக இருக்கும் என்றும் சு.சுவாமி கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக 2-ஆக பிளவுப்பட்டுள்ளது. எடப்பாடி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதிமுகவின் இரு அணிகளும் இணைய ஓபிஎஸ் கோரிக்கையின் பேரில் சசிகலாவையும், தினகரனையும் அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைப்பதாக எடப்பாடி அணியினர் அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து தினகரனுக்கு எம்எல்ஏ-க்களின் ஆதரவு பெருகி வருகிறது. அவரை 36 எம்எல்ஏ-க்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் எடப்பாடி அணி எப்போது வேண்டுமானாலும் பெரும்பான்மை பலத்தை இழக்கலாம் என்று தெரிகிறது.

அதிமுக
இந்நிலையில் புதியதலைமுறை தொலைக்காட்சி சேனலில் அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுப்பிரமணியன் சுவாமியிடம் அதிமுக குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

முட்டாள்தனம்
அதற்கு அவர் பதிலளிக்கையில், அதிமுகவின் உண்மையான தலைமை சசிகலாதான். இரட்டை இலையை முடக்கி வைத்து முட்டாள்தனம் செய்துவிட்டது தேர்தல் ஆணையம். எம்எல்ஏ-க்கள் அனைவரும் சேர்ந்துதானே சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தனர்.

முடக்கியது தவறு
இரட்டை இலையை முடக்கியதன் பின்புலமெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் சின்னத்தை முடக்கியது தவறு. சசிகலாவிடம் பெரும்பான்மையான எம்எல்ஏ-க்கள் இருப்பதால் இரட்டை இலை சின்னம் அவருக்கு கிடைப்பதுதான் நியாயம்.

சசிகலாவிடம்தான் இருக்க வேண்டும்
சசிகலா அணி, எடப்பாடி அணி, தினகரன் அணி, ஓபிஎஸ் அணி அதெல்லாம் கிடையாது. கட்சிக்குள் ஏகப்பட்ட அபிப்ராயங்கள் இருக்கலாம்.ஆனால் கட்சி தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதை அனைவரும் கேட்டுதானே ஆக வேண்டும். கட்சியின் கட்டுப்பாடும் சசிகலாவிடம்தான் இருக்க வேண்டும் என்றார் சுவாமி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications