மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்: பெ.மணியரசன்
சென்னை: காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
'ஒரு மாதத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டுமென்று இந்திய அரசுக்கு (20.09.2016) உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது வரவேற்கத் தகுந்த தீர்ப்பு! மிகவும் காலம் தாழ்த்தப்பட்ட முடிவு என்றாலும் இன்றைக்காவது இம்முடிவு உச்ச நீதிமன்றத்தில் வந்ததே என்று நாம் மன நிறைவடையலாம்.

19.09.2016 அன்று காவிரி மேற்பார்வைக் குழு நடுநிலை தவறி, கர்நாடகச் சார்போடு 3,000 கன அடி தண்ணீர் திறந்துவிட அளித்த முடிவை நேற்று உச்ச நீதிமன்றம் ஓரளவு மாற்றி 21.09.2016 முதல் 27.09.2016 வரை 6,000 கன அடி தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டிருப்பதும் ஓரு வகையில் ஆறுதல் தருகிறது.
இப்பொழுது, பா.ச.க. நடுவண் அரசு இந்தத் தீர்ப்பை நிறைவேற்றும் வகையில் ஒரு மாதத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். ஏற்கெனவே பக்ராநங்கல் அணையில் அமைக்கப்பட்ட மேலாண்மை வாரிய முன்மாதிரியைப் பின்பற்றி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்று துல்லியமான வழிகாட்டுதல்களுடன் காவிரித் தீர்ப்பாய இறுதித் தீர்ப்பு வரையறைகள் வழங்கியுள்ளது. இந்திய அரசு அந்த வரையறைகளைப் பின்பற்ற வேண்டும்.
இத்தீர்ப்பையொட்டி, கர்நாடகத்தில் தமிழர்கள் உயிருக்கும் உடைமைகளுக்கும் தீங்கு நேராமல் பாதுகாக்கும் பொறுப்பு இந்திய அரசுக்கு இருக்கிறது.
கர்நாடகத் தமிழர்களின் பாதுகாப்பிற்குரிய எல்லா ஏற்பாடுகளையும் வலுவாகச் செய்திட இந்திய அரசைத் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும். விழிப்புணர்வோடு தமிழ்நாடு அரசு கர்நாடக நகர்வுகளைக் கண்காணிக்க வேண்டும். '' இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications