அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸுடன் கூட்டணியில்லை: ஒத்த கருத்துடைய கட்சிகள் வரலாம் – வைகோ அழைப்பு
சென்னை: அதிமுக, திமுகவிற்கு மாற்றாக மக்கள் நலக்கூட்டணி செயல்படும் என்று அந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ கூறியுள்ளார். ஒத்த கருத்துடைய கட்சிகள் தங்கள் கூட்டணியில் இணையலாம் என்றும் வைகோ தெரிவித்துள்ளார். அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைக்கமாட்டோம் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மமக ஆகிய 5 கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டு இயக்கத்தை உருவாக்கின. மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியது மக்கள் நலக் கூட்டு இயக்கம். பஞ்சபாண்டவர் கூட்டணி என்று கூறி வந்த நிலையில் தேர்தல் கூட்டணியில் இணையமாட்டோம் என்று கூறி மமக விலகியது.

இந்த நிலையில் இந்த கூட்டு இயக்கத்தில் நான்கு பேர் இணைந்து தேர்தலுக்காக மக்கள் நலக்கூட்டணியை உருவாக்கியுள்ளனர். மக்கள் நலக்கூட்டணியில் மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து 2016 சட்டசபை தேர்தலை சந்திக்கப் போவதாக இன்று அறிவித்துள்ளனர்.
இந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக வைகோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்காக கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டத்தை தயாரித்துள்ளனர். இதை இறுதி செய்து, சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் இன்று வெளியிட்டனர். அதில் ஊழல் எதிர்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, அதிமுக, திமுகவிற்கு எதிராக மக்கள் நலக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்கப் போகிறோம். மக்கள் நலக் கூட்டு இயக்கம் இன்று முதல் மக்கள் நலக்கூட்டணியாக இன்று முதல் உருவாகியுள்ளது.
மக்கள் நலக்கூட்டு இயக்கம் நிரந்தரமானது. இதில் நான்கு அமைப்புகள் நிரந்தரமாக இருக்கும். இது இந்த சட்டசபை தேர்தல் மட்டுமல்லாது, உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தல் என ஒரு தொலை நோக்கோடு நிரந்தரமாக செயல்படும் என்றும் மக்கள் நலக்கூட்டணியில் ஒத்த கருத்துடைய கட்சிகள் கூட்டணிக்கு வருவதை நாங்கள் வரவேற்கிறோம் என்று வைகோ தெரிவித்தார்.

இந்த கூட்டணியை வலுவான கூட்டணியாக மாறி தேர்தலை சந்திப்போம். இந்த கூட்டணியில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், பாமக ஆகிய கட்சிகளுக்கு இடமில்லை என்று கூறிய வைகோ, ஒத்த கருத்துடைய கட்சிகள் தங்கள் கூட்டணியில் இணையலாம் என்று வைகோ தெரிவித்தார்.
இந்த அறிவிப்பின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications