தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை தேவை- ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் வைகோ கோரிக்கை
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை வைகோ இன்று சந்தித்தார்.
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை மதிமுக பொதுச்செயலர் வைகோ இன்று சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதற்கான சட்ட திருத்தத்தை கொண்டுவர பிரதமர் மோடியிடம் வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக வைகோ தெரிவித்துள்ளார்.
ரூபாய் நோட்டு செல்லாது விவகாரத்தில் பிரதமர் மோடியின் நடவடிக்கைகளை ஆதரிப்பதாக வைகோ அறிவித்திருந்தார். இதற்கு மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இடதுசாரிகட்சிகளும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இதனால் மக்கள் நலக் கூட்டணி நீடிக்குமா? என்ற கேள்வியும் எழுந்தது. மேலும் பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்காகவே வைகோ இத்தகைய கருத்துகளை பேசிவருகிறார் எனவும் கூறப்பட்டது.

திடீர் சந்திப்பு
இந்த நிலையில் இன்று திடீரென தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை வைகோ சந்தித்து பேசினார். இது தொடர்பாக வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிள்ளைகளைப் போல காளைகள்
தமிழகத்தில் ஜல்லிகட்டு காளைகள் பிள்ளைகளைப் போல வளர்க்கப்படுகின்றன. காளைகளுக்கு சாராயம் ஊற்றுகிறார்க என்பதெல்லாம் பொய்.

ஆடு கோழி வெட்ட தடையா?
மிருகவதை என்ற பெயரில் ஜல்லிக்கட்டுவுக்கு தடை விதித்திருப்பது நியாயம் அல்ல. ஆடு, கோழிகளை துண்டாக வெட்டுவதும்கூட மிருகவதைதான். அதனால் நாடு முழுவதும் ஆடு, கோழிகள் வெட்ட தடை விதிக்க முடியுமா?

ஜல்லிக்கட்டு அவசியம்
காரில் செல்லும்போது விபத்துகள் ஏற்படுகின்றன. இதற்காக கார்களே கூடாது என தடை விதித்துவிட முடியுமா? என ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் ஜல்லிக்கட்டுவின் முக்கியத்துவம் குறித்து விவரித்தேன். பிரதமரை நேரில் சந்திக்கும் போது ஜல்லிக்கட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்துவதற்கான சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துங்கள் எனவும் கோரிக்கை வைத்தேன்.
இவ்வாறு வைகோ கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications