நாட்டுப்புற ஆட்டம் பாட்டம்.. கிராமத்தில் விஜயகாந்த் பொங்கல் கொண்டாட்டம்
நாட்டுப்புறப் பாடல்கள், ஆட்டம், பாட்டம் என கிராமத்தில் விஜயகாந்த் பொங்கல் கொண்டாடினார். அதில், தேமுதிகவைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருப்போரூர்: போரூரில் அருகே காயாறில் விஜயகாந்த் பொங்கல் கொண்டாடினார். இந்த விழா நாட்டுப்புற பாடல்கள், ஆட்டம், தப்பு என கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான தேமுதிகவினர் கலந்து கொண்டனர்.
வருமானத்திற்கு போதிய வழியில்லாத காரணங்களால், நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இயன்றதை செய்வோம், இல்லாதவருக்கே என்ற அடிப்படையில் தேமுதிக சார்பில் இன்று காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம் காயார் கிராமத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.

இந்த விழாவில், புத்தரிசி, வெல்லம், முந்திரி பருப்பு, ஏலக்காய், கரும்பு, மஞ்சள், நெய் போன்ற பொருட்கள் கொண்ட பை ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், நாட்டுப்புற பாடல்கள் இசைக்கப்பட்டு, ஆடல், பாடல் என திருவிழா அமர்க்களப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் சேர்ந்து கொண்டாடும் வகையிலும், உழைப்பின் மகிமையை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையிலும் இந்த பொங்கல் கொண்டாடப்படுகிறது என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications