அவசர கோலத்தில் தமிழக அரசு முடிவெடுப்பதால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படுகிறது: விஜயகாந்த்
சென்னை: எதிர்கட்சியினர் மீது அவதூறு வழக்கு போடுவதில் தொடங்கி தமிழக அரசு அனைத்திலுமே அவசர கோலத்தில் முடிவை எடுப்பதால்தான் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுகிறது என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,கூறியுள்ளதாவது:
'தமிழக அரசு அவசர கோலத்தில் ஒவ்வொரு முடிவையும் எடுக்கின்ற காரணத்தால் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுகிறது.
சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தமிழக அரசு பொதுப்பணித்துறையின் மூலம் தடை விதிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொள்ளாமலும், மக்களுக்கு தேவையானவற்றை அறிந்து செயல்படாததால்தான் உயர்நீதிமன்றம் அந்த அரசாணையை தள்ளுபடி செய்துள்ளது.

தமிழக அரசால் என் மீது போடப்பட்டுள்ள அவதூறு வழக்குகளுக்கு நான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து தடை ஆணை கேட்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு செய்தது. அங்கு சில கருத்துகளை உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு எதிராக தெரிவித்தவுடன், அந்த மனுவையே அரசு திரும்பப்பெற்றது.
ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் முதல்வரை அவதூறாக பேசியதாக சொல்லி, உளுந்தூர்பேட்டை மற்றும் போடியிலும் அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் தே.மு.தி.க.வினர் மீது வழக்கு தொடுத்தார்கள். இரண்டு நீதிமன்றங்களும் இந்த வழக்கில் முகாந்திரம் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தன.
வரப்போகின்ற லோக்சபா தேர்தலை மனதில் கொண்டு, ஒரு நாணயத்திற்கு இரு பக்கம் இருப்பதைப்போல, ஒவ்வொரு பிரச்னையிலும் இரு வேறான கருத்துகளை கொண்டிருப்பதால்தான் நீதிமன்றத்தில் இப்படிப்பட்ட பின்னடைவுகளை தொடர்ந்து தமிழக அரசு பெற்று வருகிறது.
தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவார்கள் என்று மத்திய அரசு சொன்னவுடன், ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் போட்டி போட்டுக்கொண்டு மீனவர்கள் விடுதலைக்கு தாங்கள்தான் காரணம் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டார்கள். மீண்டும் இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டபோது, இரண்டு பேருமே அதற்கு பொறுப்பேற்கவில்லை.
இவ்வாறு விஜயகாந்த் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications