திமுக அரசின் செயல்பாடுகளை சும்மா சொல்லக் கூடாது.. பின்றாங்கப்பா! சபாஷ் போடும் விஜயகாந்த் மகன்!
மயிலாடுதுறை: மழை வெள்ள பாதிப்பு விவகாரத்தில் திமுக அரசின் செயல்பாடுகளை சும்மா சொல்லக் கூடாது என்றும் வரவேற்கத் தக்க வகையில் அரசின் நடவடிக்கைகள் அமைந்திருப்பதாகவும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுக அரசை பாராட்டி விஜயகாந்த் மகன் பேசியிருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அவர் இதனைக் கூறினார்.

விஜயகாந்த் மகன்
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அழுகிய நிலையில் இருந்த பயிர்களை விஜய பிரபாகரனிடம் காண்பித்த விவசாயிகள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். அதனை கவனமாக கேட்டுக் கொண்ட விஜய பிரபாகரன், நிச்சயம் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார்.

அரசுக்கு கோரிக்கை
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய பிரபாகரன், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ 30,000 வழங்க அரசு முன் வரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். அதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி, தரங்கம்பாடி தாலுக்காகளுக்கு நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது போல், குத்தாலம் தாலுகாவுக்கும் நிவாரண தொகை அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

அரசின் நடவடிக்கைகளுக்கு வரவேற்பு
மழை வெள்ளத்தால் பாதித்த மாவட்டங்களில் தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேமுதிக வரவேற்பு தெரிவிப்பதாகவும் உடனடியாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இதனிடையே தெலுங்கு சினிமாவில் விஜய் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏற்புடையதல்ல என்று கூறிய விஜய பிரபாகரன், தமிழகத்தில் அனைத்து மொழி படங்களும் வரவேற்கப்பட்டு வெற்றியடைந்துள்ளதாக கூறினார்.

பக்குவம் வந்தது
தமிழ் திரைப்படங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போக்கால் சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர்கள் என கவலைத் தெரிவித்தார். விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனின் அணுகுமுறைகளில் முன்பைக் காட்டிலும் பெரியளவில் மாற்றமும், பக்குவமும் வெளிப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் இறுதியானது.. திமுக தலைமையகத்தில் சுதீஷ் சொன்ன சேதி! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு












Click it and Unblock the Notifications