பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சென்னையில் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
சென்னை: சென்னையில் இன்று முதல் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் வேலை தொடங்கியுள்ளது. பல்வேறு பகுதிகளிலும் தெருக்கள், சாலைகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்து கடலில் கரைத்தனர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை நகரில் 2600 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டன. விநாயகர் சிலைகளை இன்று முதல் 4 நாட்கள் ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளை எடுத்து செல்ல 4 ஊர்வல பாதைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி விநாயகர் சிலைகளை ஊர்வமாக எடுத்து சென்று கடலில் கரைக்கும் பணி இன்று தொடங்கியது.

வடசென்னையில் உள்ள விநாயகர் சிலைகள் முத்துசாமி பாலம் அருகே ஒன்று சேர்ந்து பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் அருகே கடலில் கரைக்கப்பட்டன. மத்திய சென்னை பகுதியில் உள்ள விநாயகர் சிலைகள் வள்ளுவர் கோட்டம் அருகே ஒன்று கூடி பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.

இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன்பேட்டை அருகே ஒன்று கூடி பாரதி சாலை வழியாக சீனிவாச புரம் கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. தென்சென்னையில் உள்ள விநாயகர் சிலைகள் பள்ளிக்கரணை, மேடவாக்கம், வேளச்சேரி வழியாக நீலாங்கரை பாலவாக்கம் பல்கலை நகர் கடலில் கரைக்கப்பட்டன.
பட்டினப்பாக்கம் கடலில் இன்று காலையில் வீடுகளில் வைத்திருந்த சிலைகளை பொதுமக்கள், சிறுவர்கள் எடுத்து வந்து பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடலில் கரைத்தனர். மதியம் முதல் பெரிய சிலைகள் கொண்டு வரப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. பட்டினப்பாக்கம் கடலில் இன்று 50 முதல் 100 சிலைகள் வரை கரைக்கப்பட்டன.

கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராட்சத கிரேன்கள் மூலம் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. சிலைகள் கரைக்கப்பட்டதையொட்டி 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நாளையும் சிலைகள் கரைப்பு நீடிக்கும். நாளைதான் அதிக அளவிலான சிலைகள் கரைக்கப்படவுள்ளது.
நீலாங்கரை பாலவாக்கம் பல்கலைநகர் கடற்கரையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக தண்டவாளம் அமைத்து டிராலி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று காலை முதலே சிலைகள் கொண்டு வரப்பட்டன. பெரிய சிலைகள் டிராலியில் வைத்து தள்ளி கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலை கரைப்பை யொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications