கிடுக்கிப்பிடி விசாரணை.. வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் விஷால் ஆடிட்டர் ஆஜர்!
சென்னை: நடிகர் விஷால் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக வருமானவரி அலுவலகத்தில் விஷால் ஆடிட்டர் இன்று ஆஜராகி அதிகாரிகளின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.
நடிகர் விஷால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். மேலும், விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில், வட பழனியிலுள்ள அவரது அலுவலகத்தில், கடந்த 23ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.

இதன்பிறகு விஷால் பெயரை குறிப்பிடாமல் வருமான வரித்துறை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், மேற்படி நபர், கடந்த 2016-2017-ஆம் ஆண்டில் வரி பிடித்தம் செய்யப்பட்ட பிறகு, ரூ.50 லட்சம் மதிப்பிலான தொகையை அரசு கணக்கில் செலுத்தவில்லை என்ற தகவலின் அடிப்படையிலேயே அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.
வருமான வரி சட்ட விதிகளின்படி, பிடித்தம் செய்யப்பட்ட வரி 7 நாட்களுக்குள் வருமான வரித்துறையிடம் செலுத்த வேண்டும். அதன்படி, மேற்படி நபர் முறைகேட்டை ஒப்புக்கொண்டு, குறிப்பிட்ட தொகையை உடனடியாக செலுத்துவதாக உறுதியளித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதற்கு பதில் அளித்த விஷால், "நான் முறைப்படி வருமான வரி செலுத்தி வருகிறேன். எந்த பிரச்சினை என்றாலும் சந்திக்க தயார்" என்று கூறினார். இந்த நிலையில் வரி செலுத்துவது தொடர்பான கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று 24ம் தேதி வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது.
இதையடுத்து விஷாலின் ஆடிட்டர் ஸ்ரீதர் இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அப்போது அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். மெர்சல் படத்தை ஆன்லைனில் பார்த்ததாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதற்கு, கடும் வார்த்தைகளில் விஷால் கண்டனம் தெரிவித்திருந்தார். இதன்பிறகே ரெய்டு நடைபெற்றதாக சர்ச்சை எழுந்தது நினைவிருக்கலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications