அடையாற்றின் கரையோர வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.. மக்கள் அவதி #ChennaiRains
சைதாப்பேட்டையில் ஆற்றின் கரையோர வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
சென்னை: சைதாப்பேட்டையில் ஆற்றின் கரையோர வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. நாளுக்கு நாள் வலுப்பெற்று வரும் வடகிழக்குப் பருவமழை கடலோர மாவட்டங்களை வெளுத்து வாங்கி வருகிறது.

கடலூர், நாகை, திருவள்ளூர் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் திருவள்ளூரில் பெய்து வரும் மழையால் சென்னை அடையாற்றில் நீர்வரத்து உயர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் சைதாப்பேட்டையில் ஆற்றின் கரையோர வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. அப்பகுதியில் வசித்த மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்களை தங்கவைக்க சமுதாய நலக்கூடங்கள் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை புறநகர் பகுதிகளும் தண்ணீரில் தத்தளித்து வருகின்றன.
தொடர் மழை மற்றும் தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ள வெள்ளத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர். இதனிடையே மேலும் 2 நாட்களுக்கு தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications