மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள அணைகளின் நீர் மட்டம் குறைந்தது
நெல்லை: போதிய மழையில்லாததாலும், கடும் வெப்பத்தாலும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள அணைகளின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் மூலமே நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களின் விவசாய தேவைகள் பூர்த்தி செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஏமாற்றம் அளித்தது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் வறண்டன. அக்டோபர் மாதம் நடக்கும் பருவ நெல் சாகுபடிக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. அதே நேரத்தில் குடிநீர் தேவைக்கு கூட அணையில் போதிய தண்ணீர் இல்லாமல் இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கோடை மழையால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நீர்மட்டம் கொஞ்சம் உயர்ந்தது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. தற்போதைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 41 அடியாக உள்ளது. இதனால் இந்த நீர் இருப்பை வைத்து எத்தனை நாட்கள் குடிநீர் வழங்க முடியும் என அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். மழை பெய்தால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications