இரட்டை இலைக்கு ஏன் கடவுளே இவ்வளவு சோதனை??.. திவாகரன் சொல்வதைப் பாருங்க!
9 எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு ஓபிஎஸ் சின்னத்தை முடக்கும் போது, எங்களிடம் உள்ள எம்எல்ஏக்களை வைத்து முடக்க முடியாதா? முடக்குவோம்.
திருவாரூர்: இரட்டை இலை சின்னத்தை அவர்கள் மீட்க முயற்சி செய்தாலும் நாங்கள் விட மாட்டோம் ஓபிஎஸ் முடக்கியதுபோல எங்களிடம் உள்ள எம்எல்ஏக்களை வைத்து முடக்குவோம் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.
திருவாரூர் அருகே உள்ள புளிச்சகாடு என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற அதிமுக பிரமுகர் இல்ல படத்திறப்பு விழாவில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் பங்கேற்றார்.
தமிழக அரசுக்கு எதிராகவும், கட்சி, சின்னத்தை முடக்குவோம் என்றும் பேட்டியளித்தார் திவாகரன்.

நாஞ்சில் சம்பத்
செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன்,நாஞ்சில் சம்பத் வரம்பு மீறி பேசுவதாக கூறுகின்றனர். தற்போது அமைச்சர்கள் பேசும் முறை நாகரீகம் என்றால் நாஞ்சில் சம்பத் பேசுவதும் நாகரீகம் தான்.

பெரும்பான்மையில்லை
சென்னையில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பாதிக்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை. இதிலிருந்தே எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது என தமிழக மக்களுக்கு தெளிவாக புரியும்.

நம்பிக்கை வாக்கெடுப்பு
நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு ஆளுநர் உத்தரவிடவில்லை எனில் குடியரசுத்தலைவரையும் நீதிமன்றத்தையும் நாடுவோம். தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்னையில் எதிர்கட்சிகளுடன் இணைந்து போராடுவோம்.

நோட்டீஸ் அனுப்பியது ஏன்?
மக்கள் பிரச்னையில் சர்வ கட்சி கூட்டத்தை கூட்டி தீர்வுகாண வேண்டியது அவசியமாகும். குட்கா விவகாரம் தொடர்பாக நடைபெற்ற உரிமைக்குழுவில் சபாநாயகர் இருக்கும்போது துணை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப வேண்டிய அவசியம் ஏன் வந்தது.

நாங்களும் முடக்குவோம்
ஓ.பி.எஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகளால் இரட்டை இலையை மீட்க முடியாது. 9 எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு ஓபிஎஸ் சின்னத்தை முடக்கும் போது, எங்களிடம் உள்ள எம்எல்ஏக்களை வைத்து முடக்க முடியாதா? முடக்குவோம். இவ்வாறு திவாகரன் தெரிவித்துள்ளார்.

நூற்றாண்டு விழா
எம்ஜிஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழா நடைபெறும் இந்த தருணத்தில் கட்சி, கொடி, சின்னம் முடக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக தொண்டர்கள் வேதனை அடைந்துள்ளனர். இதை மீட்க வேண்டும் என்பதே தொண்டர்களின் கோரிக்கை. ஆனால் பதவி சண்டையில் ஆள் ஆளுக்கு மல்லுக்கட்ட எதிர்கட்சியினருக்குத்தான் கொண்டாட்டமாக உள்ளது என்கின்றனர் உண்மையான அதிமுக தொண்டர்கள்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications