விட மாட்டோம்... நிச்சயம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம்.. தம்பிதுரை சூளுரை!
ஜிஎஸ்டியில் உள்ள பாதகங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம் என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜிஎஸ்டியில் உள்ள பாதகங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம் என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி தொழில் அதிபர்கள், பணக்காரர்களுக்கு ஆதரவாக இருந்தால் ஏற்கமாட்டோம் என்றும் தம்பிதுரை கூறியுள்ளார்.
ஒரே நாடு ஒரே வரி என்ற கொள்கையில் கடந்த ஒன்றாம் தேதி முதல் ஜிஎஸ்டி சட்டத்தை மத்திய அரசு நாடு முழுவதும் அமல் படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மத்திய அரசின் இந்த புதிய சட்டத்துக்கு எதிராக பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் நான்காவது நாளாக போராட்டத்ல் ஈடுபட்டுள்ளனர். திரையரங்குகளும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வரி வருவாய் இழப்பு
இந்நிலையில் லோக்சபா துணை சபாநாயகரும் அதிமுக எம்பியுமான தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஜிஎஸ்டி வரியால் மாநிலங்களுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மத்திய அரசு ஈடுகட்ட வேண்டும்
ஜிஎஸ்டியால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்பை மத்திய அரசு தொடர்ந்து ஈடுகட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஜிஎஸ்டி பணக்காரர்கள், தொழில் அதிபர்களுக்கு ஆதரவாக இருந்தால் ஏற்கமாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.

அதிமுக குரல் கொடுக்கும்
ஜெயலலிதாவின் கோரிக்கைக்கு செவிசாய்த்து மத்திய அரசு ஜிஎஸ்டியில் சில திருத்தங்களை செய்தது என்று கூறிய தம்பிதுரை அதனாலேயே ஜிஎஸ்டியை ஆதரித்தோம் என்றார். ஜிஎஸ்டியால் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது என்பது உண்மைதான் என்ற அவர் ஜிஎஸ்டியால் பாதிப்பு ஏற்பட்டால் நாடாளுமன்றத்தில் அதிமுக குரல் கொடுக்கும் என்றார்.

நாடாளுமன்றத்தில் கேள்வி
ஜிஎஸ்டியில் உள்ள பாதகங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம் என்றும் தம்பிதுரை உறுதிபடத் தெரிவித்தார். மேலும்
ராம்நாத் கோவிந்த் நல்லவர் என்ற அடிப்படையிலேயே அவருக்கு குடியரசுத்தலைவர் தேர்தலில் ஆதரவு அளித்ததாகவும் தம்பிதுரை கூறினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications