1975ஆம் ஆண்டு வரை தியேட்டர்களில் இசைக்கப்பட்ட தேசிய கீதம் நிறுத்தப்பட்டது ஏன்?
தியேட்டர்களில் 1975ஆம் வரை தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது. மக்கள் அதற்கு உரிய மரியாதை கொடுக்காததால் தேசியகீதம் நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை: நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு தேசியக்கீதம் இசைக்கப்படுவது இது முதல் முறையல்ல. 1975ஆம் ஆண்டு வரை திரையரங்குகளில் தேசியக் கீதம் இசைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களில் திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் கட்டாயமாக இசைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அப்போது திரையில் தேசியக்கொடி காட்டப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திரையரங்குகளில் தேசியக்கீதம் இசை கப்படுவது இது முதல் முறையல்ல. 1975ஆம் ஆண்டு வரை திரையரங்குகளில் தேசியக்கீதம் இசைப்பட்டது.

எப்போது வரை இசைக்கப்பட்டது தேசிய கீதம்
1975ஆம் ஆண்டு வரை திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவது வழக்கமாக இருந்தது. ஆனால் திரைப்படம் தொடங்குவதற்கு முன்னால் அல்ல. திரைப்படம் முடிந்த பிறகு இசைக்கப்பட்டது.

தேசிய கீதத்தை அவமதித்த மக்கள்
படம் முடிந்த பிறகு திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஆனால் மக்கள் அதனை மதிக்காமல் தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காமல், அதில் கவனம் செலுத்தாமல் இருந்தனர்.

திரையரங்குகளில் தேசியக்கீதத்துக்கு தடை
மக்களின் அவமதிப்பால் திரையரங்குகளில் தேசிய கீதம் தடை செய்யப்பட்டது. தேசிய கீதத்தை இசைத்து அதனை அவமதிப்பதை விட இசைக்காமல் இருப்பது நல்லது என முடிவு செய்யப்பட்டது.

தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்
திரையரங்குகளில் தேசிய கீதத்தை இசைப்பது தொடர்பான மனுவை 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அப்போது திரையரங்குகளில் தேசிய கீதத்தை இசைப்பது குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் படத்தை காட்சிப்படுத்துவற்கு முன்பு மக்கள் எழுந்து நிற்பது இடையூறை ஏற்படுத்தும் தெரிவித்தது. மேலும் இதனால் தேசிய கீதத்துக்கு அவமதிப்பதான் ஏற்படும் என்றும் கூறி சென்னை உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications