மக்கள் நீதி மய்யம்.. யார் அந்த ஸ்தாபகத் தலைவர்?
கமலின் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஜெயேந்திரர் மறைவுக்கு வெளியிட்ட இரங்கல் செய்தி லெட்டர் பேடில் ஸ்தாபகத் தலைவர் என்ற இடத்தில் யாருடைய பெயரும் இல்லை. கையெழுத்தும் இல்லை.
Recommended Video

சென்னை: ஜெயேந்திரர் மறைவுக்கு கமலின் மக்கள் நீதி மய்யம் சார்பில் லெட்டர் பேடில் வெளியிடப்பட்ட இரங்கல் செய்தியில் ஸ்தாபகத் தலைவர் என்று மொட்டையாக உள்ளதால் அது குறித்து புது கேள்வி எழுந்துள்ளது.
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கிடையே கமல்ஹாசன் கடந்த வாரம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். அன்றைய தினமே அதன் நிர்வாகிகள் பட்டியலையும் வெளியிட்டார்.
இந்த கட்சிக்கு கமல்தான் பொதுச் செயலாளர் என்று கூறப்பட்டது. மேலும் தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒருவரே முதல்வராக இருக்க மாட்டார்கள் என்றும் மாறி மாறி ஒருவர் பின் ஒருவராக முதல்வராக இருப்பர் என்றும் தெரிவித்திருந்தார்.

அனைத்து கட்சி கூட்டம்
இவர் கட்சி தொடங்கிய அடுத்த நாளே காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. ஆனால் அதில் கமலுக்கு அழைப்பில்லை. இதுகுறித்து ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை வெளியிட்ட வண்ணம் இருந்தனர்.

இடது சாரி , வலது சாரி
கட்சியின் பெயரை வெளியிட்டு அதை கமல் விளக்கும் போது தான் இடதுசாரியும் இல்லாமல் வலது சாரியும் இல்லாமல் இரண்டுக்கும் மய்யமாக இருந்து செயல்படுவேன் என்பதற்காகவே மய்யம் என்ற வார்த்தை சேர்க்கப்பட்டது என்றார். மேலும் அவரது கட்சியின் கொடி மும்பை தமிழ் அமைப்பிடம் இருந்து சுட்டது என்றெல்லாம் சமூகவலைதளங்களில் பரவலாக பேச்சு இருந்தது.

ஸ்தாபகத் தலைவர்
மூச்சு திணறலால் உயிரிழந்த ஜெயேந்திரருக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் இரங்கல் செய்தி அனுப்பப்பட்டது. அந்த லெட்டர் பேடில் ஸ்தாபகத் தலைவர், மக்கள் நீதி மய்யம் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் புது கேள்வி எழுந்துள்ளது.

கையெழுத்தில்லாத செய்தி
அந்த லெட்டர் பேடில் ஸ்தாபகத் தலைவர் யாரென்ற விவரங்கள் இல்லை. ஒரு கமலாக இருப்பாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படியே அவராக இருந்தால் அவரது பெயரையும் கையெழுத்தையும் இட்டு அறிக்கையை அனுப்புவதில் என்ன பிரச்சினை இருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபோல் பெயர், கையெழுத்து இல்லாமல் இருக்கும் லெட்டர் பேடுகளால் அதில் உள்ள செய்தியின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாவதோடு, தவறாக பயன்படுத்துவதற்கும் வழி வகுக்கும் என்பதை கமல் அறியாதவரா என்ன?
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம்












Click it and Unblock the Notifications