குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.கவுக்கு ஆதரவு ஏன் ? : ஓ. பன்னீர்செல்வம் விளக்கம்
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சியின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்கப்போவதாக அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா பிரிவின் பொருளாளரான ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார்.
பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவரான அமித் ஷா பன்னீர்செல்வத்தை தொடர்புகொண்டு, ஆதரவளிக்கும்படி கேட்டதாகவும் அதனால், ராம்நாத்திற்கு ஆதரவளிப்பதாகவும் அந்தக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தனது பிரிவு நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம், ராம்நாத் இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், பிஹார் ஆளுனராகவும் சிறப்பாகச் செயல்பட்டவர் என்பதால் ஆதரவளிப்பதாகக் கூறினார்.
- சசிகலா குடும்பம் அதிமுகவில் இருக்கும்வரை இணைப்பு சாத்தியமில்லை: ஓ. பன்னீர்செல்வம்
- ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்: ஓ. பன்னீர்செல்வம்
காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளும் தலித் வேட்பாளரையே நிறுத்தக்கூடும் என்ற பேச்சுக்கள் அடிபடும் நிலையில், அதற்கு முன்பாகவே ஆதரவை அறிவிப்பது ஏன் என செய்தியாளர்கள் கேட்டதற்கு சரியான பதிலை ஓ. பன்னீர்செல்வம் அளிக்கவில்லை.
அ.தி.மு.கவில் மொத்தமுள்ள 135 சட்டமன்ற உறுப்பினர்களில் 12 சட்டமன்ற உறுப்பினர்கள் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக உள்ளனர். 12 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஓ. பன்னீர்செல்வத்தைச் சந்தித்து ஆதரவை தெரிவித்திருந்தனர்.
அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளரான டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 34 சட்டமன்ற உறுப்பினர்களும் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்கும் நிலையில், அவர் என்ன நிலைப்பாடை எடுப்பார் என்பது குறித்து இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.
அ.தி.மு.கவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களில், மனிதநேய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தமீமுன் அன்சாரி, தான் பாரதிய ஜனதாக் கட்சியின் வேட்பாளரை ஆதரிக்கப்போவதில்லை என தெரிவித்துவிட்டார்.
முக்குலத்தோர் புலிப்படைக் கட்சியின் உறுப்பினரான கருணாஸ் வியாழக்கிழமை காலையில் டிடிவி தினகரனைச் சந்தித்தார். இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், சசிகலா யாரை ஆதரிக்கச் சொல்வாரோ அவரையே குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரிக்கப்போவதாகத் தெரிவித்தார்.
பிற செய்திகள் :
- மனிதனே மாடாக மாறி ஏர் உழும் ஏழை விவசாயின் பரிதாப நிலை
- விஞ்ஞானிகளையே அதிர வைக்கும் 5 ரோபோக்கள்
- கவிழும் இரு சக்கர சூட்கேசுகள்: தீர்வு என்ன?
- செளதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசரை பற்றிய ஐந்து விஷயங்கள்
மாடுகளை இறைச்சிக்காக விற்க முடியாவிட்டால் தெருவில்தான் அவிழ்த்துவிட வேண்டும்'
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications